ஸ்கெட்ச் போட்ட ராட்சசன்! தமிழ்நாட்டை நோக்கி வரும் புயல்! இந்த தேதி.. இந்த இடம்தான் ரொம்ப முக்கியம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டை நோக்கி புயல் வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது . இன்னும் 2 நாட்களில் உருவாக உள்ள புயல் அதன்பின் தமிழ்நாட்டை நோக்கி நகரும்.

கடந்த 27-11-2023ம் தேதி காலை 08.30 மணி அளவில் தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து கொண்டு இருக்கிறது. தற்போது இது தீவிர காற்றழுத்த தாழ்வு மையமாக மாறி உள்ளது.

Where will the new cyclone hit, When it will hit in Tamil Nadu? All you need to know about rain

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும். இது அதற்கடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெற கூடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

வானிலை மைய அறிவிப்பு; அதோடு டிசம்பர் 1ம் தேதி இது புயலாக மாறும். அதன்பின் இது தீவிர புயலாக மாறி.. பின்னர் டிசம்பர் 2-3ம் தேதிகளில் அதி தீவிர புயலாக மாறும். பெரும்பாலும் இந்த சமயத்தில் புயல் நகர்ந்து நகர்ந்து டிசம்பர் 4ம் தேதி சென்னைக்கு கிழக்கு பகுதிக்கு வரும்.

இந்த புயல் சென்னைக்கு எவ்வளவு அருகே வருகிறது என்பதை பொறுத்தே இந்த புயல் காரணமாக சென்னையில் எவ்வளவு மழை பெய்யும் என்பது தெரியும். இந்த புயலால் பெரும்பாலும் தெற்கு ஆந்திர பிரதேசத்தில் காவாலி அருகே தீவிர புயலாக கரையை கடக்கும் வாய்ப்புகள் உள்ளன. டிசம்பர் 5ம் தேதி மாலை அல்லது இரவில் இது கரையை கடக்கும் வாய்ப்புகள் உள்ளன, என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கவனிக்கப்பட வேண்டிய தேதிகள்; இதில் டிசம்பர் 3 , 4, 5 தேதிகள் கவனிக்கப்பட வேண்டியது. 3ம் தேதி இந்த புயல் உருவாகும். இதில் 4ம் தேதி சென்னைக்கு அருகே வரும். 5-6 தேதிகளில் புயல் கரையை கடக்கும்.

கவனிக்கப்பட வேண்டிய இடங்கள்: இதில் புயல் உருவாகும் நாளில் இருந்து தமிழ்நாட்டில் கனமழை பெய்யும். முக்கியமாக வட தமிழ்நாட்டில் கனமழை பெய்யும். புயல் வடக்கு தமிழ்நாட்டை நெருங்கிய பின் மழையின் தீவிரம் அதிகரிக்கும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் பகுதிகளில் மிக கனமழை பெய்யும்.

இந்த பகுதிகள் மற்றும் கடலோர ஈசிஆர் மாவட்டங்கள் எல்லாம் கனமழையை சந்திக்க போகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று மஞ்சள் அலர்ட்: தமிழ்நாடு முழுக்க இன்று கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. சென்னை , திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+