சென்னையில் இடி மின்னலுடன் வெளுத்து வாங்கும் கனமழை.. மதுரையிலும் மழை கொட்டுது!
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை கோயம்பேடு, அண்ணாநகர், முகப்பேர், வளசரவாக்கம், போரூர், அமைந்தகரை, அரும்பாக்கம், எழும்பூர், பெரியமேடு உள்ளிட்ட பகுதிகளில் தற்போது பரவலாக கனமழை பெய்து வருகிறது.
இதேபோன்று, சென்னை புறநகர் பகுதிகளான அம்பத்தூர், ஆவடி, பூந்தமல்லி, செங்குன்றம், மாதவரம் உள்ளிட்டப் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. மதுரை, சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் தற்போது மழை பெய்து வருகிறது.

தமிழ்நாட்டில் இன்று ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் கடந்த 4 ஆம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில், 11 மாவட்டங்களில் வெயில் சதம் அடித்தது. அதிகபட்சமாக வேலூரில் 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. எனினும், பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து குளிர்வித்தது. இதனால் அன்று இரவே வெப்பம் தணிந்து குளுமையான சூழல் நிலவியது. இந்நிலையில் இன்றும் பல மாவட்டங்களில் மழை பெய்துள்ளது.
சென்னையில் இடியுடன் கூடிய கனமழை பெய்து கொண்டிருக்கிறது
— SHAAN SUNDAR🖤♥️🖤♥️ (@Sun46982817Shan) May 6, 2025
♥️♥️♥️♥️♥️♥️♥️♥️ pic.twitter.com/HRkt2jaaTs
தமிழகத்தில் இன்று இரவு 10 மணி வரை 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டத்தில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இப்பகுதிகளில் 30 40 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.
இதேபோன்று திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இன்றும், நாளையும் ஒரு சில இடங்களில் 30-40 கி.மீ. வேகத்தில் காற்றுடன் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டிரான்ஸ்பரான சந்தீப் ராய் ரத்தோர் டிஜிபியானது எப்படி? இரவில் நடந்தது என்ன? -
சென்னைவாசிகளுக்கு மிக பெரிய நிம்மதி.. சீரானது புறநகர் ரயில் சேவை.. வழக்கமான அட்டவணையில் இயக்கம்! -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
கடும் கோபத்தில் மோடி.. சென்னை ரோடுஷோ - பிரசாரமே வேண்டாம்.. பாஜக தலைகளை பந்தாட தயாராகும் மேலிடம் -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
அதிகாலையில் ஷாக்! தாறுமாறாக உயர்ந்த விமான கட்டணம்! சென்னை-தூத்துக்குடிக்கு டிக்கெட் ரேட்டை பாருங்க -
“தேவையில்லாம பேசின.. அவ்ளோதான்”.. விஜய்யை விமர்சித்த இளைஞரை விரட்டிச் சென்று மிரட்டிய ரசிகை! -
சென்னை Red zone.. நாளை சென்னைக்கு வரும் பிரதமர் மோடி.. டிரோன்களுக்கு தடை.. கடும் பாதுகாப்பு! -
LPG கேஸ் சிலிண்டர் பதுக்கினால் குண்டர் சட்டம் பாயும் - தமிழ்நாடு அரசு அதிரடி எச்சரிக்கை! -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்!












Click it and Unblock the Notifications