செப்.22ல் ஜெ.வுக்கு என்ன நடந்தது.. அளிக்கப்பட்ட சிகிச்சைகள் என்ன.. விசாரணை கோரும் மைத்ரேயன்
அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்படுவதற்கு முன்னர் அவருக்கு என்ன நடந்தது என்பது குறித்து விசாரிக்க வேண்டும் என்று அதிமுக எம்பி மைத்ரேயன் கூறியுள்ளார்.
டெல்லி: மறைந்த ஜெயலலிதா மரணம் குறித்து விரிவான விசாரணை தேவை என்று அதிமுக எம்பி மைத்ரேயன் கூறியுள்ளார். இதுதொடர்பாக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை நேரில் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
பின்னர், செய்தியாளர்களிடம் மைத்ரேயன் பேசியதாவது:

ஜெயலலிதாவிற்கு செப்டிசிமியா உள்ளதால் அவரை யாரும் பார்க்கக் கூடாது என்று அப்பல்லோ மருத்துவமனையில் அவரை பார்க்க யாரும் அனுமதிக்கப்படவில்லை. அந்த நோயே இருந்தாலும் கூட ஒரு சில மணித் துளிகள் நோயாளியை பார்க்க அனைத்து மருத்துவமனையிலும் அனுமதி உண்டு.
அப்பல்லோவில் இருந்த 75 நாட்கள் யாராலும் ஜெயலலிதாவை பார்க்க முடியவில்லை. எல்லாம் நன்றாக இருப்பதாகவே கூறிக் கொண்டிருந்தார்கள். திடீரென்று டிசம்பர் 4ம் தேதி திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும், பின்னர் 5ம் தேதி அவர் மரணம் அடைந்துவிட்டார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.
இதில் பல்வேறு குளறுபடிகளும் சந்தேகங்களும் உள்ளன. இந்த சந்தேகத்தை போக்குவதுதான் ஜெயலலிதாவிற்கு செலுத்தக் கூடிய அஞ்சலியாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். எனவே, இந்த மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும்.
அப்பல்லோ மருத்துவமனையில் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை என்ன? அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் உள்ள குறைபாடுகள் என்ன? செப்டம்பர் 22ம் தேதி போயஸ் கார்டனில் என்ன நடந்தது? அதற்கு முன்பாக ஜெயலலிதாவிற்கு கொடுக்கப்பட்ட சிகிச்சை என்ன என்பது குறித்தெல்லாம் விசாரிக்க வேண்டும். அப்போதுதான் உண்மை வெளியே வரும் என்று மைத்ரேயன் கூறியுள்ளார்.
-
பாஜக சிம்ப்ளி வேஸ்ட்.. திருமாவளவன் பெஸ்ட்.. புயலை கிளப்பிய வால்பாறை அதிமுக வேட்பாளர் ஆடியோ -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்!












Click it and Unblock the Notifications