வருங்காலத்தில் இந்தியாவில் கோடை கொடூரமாக இருக்கும்: பகீர் ஆய்வு முடிவு
மும்பை: கோடை வெயிலின் தாக்கத்தை தாங்காமல் இந்த ஆண்டு பல்வேறு மாநிலங்களில் 2 ஆயிரத்து 300 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் வரும் ஆண்டுகளில் கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்று ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் ஆண்டுதோறும் கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்த ஆண்டு கோடை காலத்தில் 2 ஆயிரத்து 300 பேர் வெயிலின் உக்கிரத்தை தாங்க முடியாமல் பலியாகினர்.
இந்நிலையில் மும்பையில் உள்ள ஐஐடியில் இனி வரும் காலத்தில் கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் எப்படி இருக்கும் என்று ஆய்வு நடத்தப்பட்டது.

தென்னிந்தியா
எதிர்காலத்தில் தென்னிந்தியாவில் அனல் காற்று அதிகமாக இருக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது என ஐஐடி மும்பையில் சிவில் என்ஜினியரிங் பிரிவு துணை பேராசிரியரும், ஆய்வை நடத்தியவர்களில் ஒருவருமான சுபிமால் கோஷ் தெரிவித்துள்ளார். இந்தியாவில் எதிர்காலத்தில் கோடை காலத்தில் வெப்பத்தின் தாக்கம் மிகவும் அதிகமாக இருக்கும் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அனல் காற்று
உலகம் வெப்பயமாகி வருவதால் அனல் காற்றின் தாக்கம் அதிகரிக்கும் என்று அண்மையில் நடத்தப்பட்ட பிற ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. 20வது நூற்றாண்டு துவங்கியதில் இருந்து உலகின் வெப்பம் 0.9 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது.

வெப்பம்
1906ம் ஆண்டில் இருந்து 2005ம் ஆண்டு வரை உலக அளவில் மேற்பரப்பு காற்றின் வெப்பநிலை 0.74 டிகிரி செல்சியஸாக அதிகரித்துள்ளது என காலநிலை மாற்றத்திற்கான அரசாங்கங்களுக்கு இடையிலான குழு தெரிவித்துள்ளது.

அறிகுறி
இந்த ஆண்டு அனல் காற்றின் தாக்கம் அதிகரித்துள்ளதை காலநிலை மாற்றத்துடன் நேரடியாக ஒப்பிட முடியாது. ஆனால் உலக வெப்பமயமாவதின் மோசமான விளைவுகளின் அறிகுறியாக இந்த அனல் காற்றை எடுத்துக் கொள்ளலாம் என்று கோஷ் கூறியுள்ளார்.
-
இனி பெட்ரோல் பங்க், சூப்பர் மார்கெட்களிலும் கூட மது கிடைக்கும்.. புதிய கலால் கொள்கை வெளியீடு -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ்












Click it and Unblock the Notifications