பிச்சை எடுப்பது போல கர்நாடகாவிடம் காவிரி நீருக்காக கெஞ்சுகிறோம்: சுப்ரீம்கோர்ட்டில் தமிழகம் வாதம்
Recommended Video

டெல்லி: காவிரி விவகாரத்தில் மத்திய அரசை நம்ப முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
காவிரி நடுவர்மன்ற தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு தாக்கல் செய்த வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. கர்நாடகா, கேரளா, தமிழகம் ஆகிய மாநிலங்கள் வழக்கில் வாதாடிவிட்ட நிலையில், மத்திய அரசின் வழக்கறிஞர் இன்று வாதம் முன் வைத்தார்.

இதனிடையே, காவிரி மேலாண்மை வாரியம் குறித்து முடிவெடுக்க மத்திய அரசுக்கே அதிகாரமுள்ளது, காவிரி நடுவர்மன்றம் ஆலோசனைமட்டும் வழங்கலாம் என்று மத்தியஅரசு வழக்கறிஞர் வாதம் முன் வைத்தார். இது தமிழக விவசாயிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையியில் தமிழக அரசு சார்பிலும், குறுக்கிட்டு, வாதம் முன்வைக்கப்பட்டது. தமிழக அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், "காவிரி விவகாரத்தில் மத்திய அரசு மற்றும் கர்நாடக அரசுகளை நம்ப முடியாது.
2007ம் ஆண்டு காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு வெளியானது. ஆனால் மத்திய அரசு 2013ல்தான் அரசிதழில் அந்த தீர்ப்பை வெளியிட்டது. இப்படி தாமதம் செய்யும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது சந்தேகமே. எனவே, உச்சநீதிமன்றமே திட்டத்தை வகுத்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கால் நூற்றாண்டாக கர்நாடகாவுடன் காவிரி விவகாரத்தில் கசப்பான அனுபவம்தான் உள்ளது. பிச்சை எடுப்பது போல கர்நாடகாவிடம் ஆண்டுதோறும் கெஞ்சுகிறோம். அப்படியும், அவர்கள் விடமறுப்பதால், உச்சநீதிமன்றத்தை அணுகி சிறிதளவு காவிரி நீரைத்தான் பெறுகிறது தமிழகம் என்று தெரிவித்தார். தொடர்ந்து வாதம் நடைபெற்று வருகிறது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications