அணு ஆயுதம்.. அடுத்த 24 மணி நேரம் ரொம்ப முக்கியம்.. பிரம்மாஸ்திரத்தை.. சோதனை செய்யும் ஈரான்?
நியூயார்க்: அணு ஆயுதம் தயாரிப்பதில் ஈரான் வெகுவாக முன்னேற்றம் அடைந்துவிட்டதாக கூறப்படுகிறது. இன்னும் ஒரு சில நாட்களில்.. முடிந்தால் 24 மணி நேரத்திற்குள் அணு ஆயுத சோதனை நடத்தும் அளவிற்கு ஈரான் முன்னேற்றம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
அணு ஆயுதத்தை தயாரிக்க பயன்படுத்தப்படும் யுரேனியத்தை செறிவூட்டும் பணிகளை தொடர்ந்து செய்வோம். அதை அமெரிக்காவால் தடுக்க முடியாது. அமெரிக்கா இதில் தலையிட முடியாது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பிற்கு ஈரான் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்து இருந்தது.

அணு ஆயுத யுரேனியம்
அணுவை வெறுமனே அணு ஆயுதம் உருவாக்க பயன்படுத்த முடியாது. யுரேனியத்தை அப்படியே எடுத்து அணு குண்டு போட முடியாது. அதை பயன்படுத்தும் முன் செறிவூட்ட வேண்டும். ஈரான் இப்போது யுரேனியத்தை 60-90 சதவிகிதம் தூய்மைக்கு செறிவூட்டுகிறது, மேலும் செறிவூட்டப்பட்டால், அது அணு ஆயுதம் தயாரிக்க ஏதுவாகும். விரைவில் இதனால் ஈரான் அணு ஆயுத சோதனைகளை மேற்கொள்ளவும் முடியும். அவசரமாக தேவைப்பட்டால் உடனே அந்த நாடு அணு ஆயுதம் தயாரிக்கவும் முடியும். ஆனால் இதில் சிக்கலே.. ஹிஸ்புல்லா இயக்கம் தற்போது சேதங்களை சந்தித்து உள்ளதால்.. அணு ஆயுதத்தை தயாரிப்பதற்கு சில வாரங்கள் ஏற்படலாம்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட ஈரான் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தாக்குதல் நடத்தினார். அதன்படி ஈரான் நாட்டிடம் இருக்கும் அணு உலகைகள் மீது அமெரிக்க அதிபர் தாக்குதல் நடத்தினார்.. ஆனால் எஸ்பஹான், நடான்ஸ் மற்றும் ஃபோர்டோவ் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவதற்கு முன்பு அங்கிருந்த யுரேனியத்தை ஈரான் வெளியே எடுத்து சென்றுவிட்டதாக செய்திகள் வருகின்றன. இதற்கான செயற்கைகோள் புகைப்படங்களும் வெளியாக உள்ளன.
ஜூன் 19-20 தேதிகளில் அந்த அணு வசதியின் நுழைவாயிலுக்கு அருகில் கனரக இயந்திரங்களுடன் 16 லாரிகள் கூடியிருந்தன. இதற்கான படங்கள் வெளியாகி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது காலிபாப்பின் மூத்த ஆலோசகர் மெஹ்தி முகம்மதி சமூக ஊடகத்தில் முக்கிய கருத்தை தெரிவித்துள்ளார். அதில் ஃபோர்டோ மீது பல இரவுகளாக தாக்குதல்கள் நடத்தப்படும் என ஈரான் எதிர்பார்த்து இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல்
அமெரிக்காவின் தாக்குதல்கள் குறித்து மெஹ்தி முகம்மதி மேலும் கூறுகையில், "அந்த தளம் நீண்ட காலத்திற்கு முன்பே காலி செய்யப்பட்டது. அதனால் பெரிய சேதம் எதுவும் ஏற்பட வாய்ப்பில்லை. அறிவை யாராலும் வெடிகுண்டு போட்டு அழிக்க முடியாது" என்று குறிப்பிட்டுள்ளார்.
ஈரான்- இஸ்ரேல் போருக்குள் அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக நுழைந்து உள்ளது. அமெரிக்கா இதில் நேரடியாக தாக்குதல்களை மேற்கொண்டு உள்ளதால்.. அடுத்த கட்டமாக ரஷ்யா, மத்திய கிழக்கு நாடுகள், ஈரான் ஆதரவு நாடுகள் போரில் தலையிட வாய்ப்புகள் உள்ளன.
ஈரானை தாக்கிய அமெரிக்கா
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில், ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய மூன்று அணு அமைப்புகள் மீது வெற்றிகரமாக தாக்குதல் நடத்தி முடிக்கப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.
டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில், "ஈரானில் உள்ள மூன்று அணு sites மீது நாங்கள் வெற்றிகரமாக தாக்குதல் நடத்தி முடித்துவிட்டோம். ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய இடங்களிலும் தாக்குதல் நடத்தப்பட்டது. அனைத்து விமானங்களும் தற்போது ஈரான் வான்வெளியை விட்டு வெளியேறிவிட்டன.
இப்படிப்பட்ட நிலையில்தான் அணு ஆயுதம் தயாரிப்பதில் ஈரான் வெகுவாக முன்னேற்றம் அடைந்துவிட்டதாக கூறப்படுகிறது. இன்னும் ஒரு சில நாட்களில்.. முடிந்தால் 24 மணி நேரத்திற்குள் அணு ஆயுத சோதனை நடத்தும் அளவிற்கு ஈரான் முன்னேற்றம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
-
இருளில் மூழ்கும் நாடுகள்.. அதிர்ச்சி கொடுக்கும் 'எரிசக்தி அவசரநிலை'.. Energy Emergency என்றால் என்ன? -
ட்ரம்ப் அகராதியில் இல்லாத அந்த வார்த்தை.. ஈரான் போரில் நடக்கும் செம ட்விஸ்ட்! உலக நாடுகள் வெயிட்டிங் -
Donald Trump: டிரம்ப் மிகப்பெரிய தாக்குதலை நடத்த தயாராகி வருகிறார்.. ஈரானை மீண்டும் மிரட்டும் அமெரிக்கா -
மத்தியஸ்தம் என பந்தா காட்டிய பாகிஸ்தான்.. அடிக்க வேண்டிய இடத்தில் அடித்த ஈரான்.. ஷெபாஸ் ஷெரீப் ஷாக் -
அசிங்கப்பட்ட பாகிஸ்தான்! முகத்திலேயே விழுந்த அடி.. கப்பலை கூட அனுமதிக்காத ஈரான்! இதெல்லாம் தேவை தானா -
ட்ரம்ப் மூக்கை உடைத்த ஈரான்.. 15 கண்டிஷன்களை தூக்கி எரிந்த அலியாபாடி! வெறி கொண்டு அடிக்கும் இஸ்ரேல்! -
ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் முடிவு என்ன? டிரம்பின் மருமகன் பயணம் ஏன் முக்கியமானது? -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
கச்சா எண்ணெய் யுத்தம்.. கத்தாரும் சவுதியும் காலி? குட்டி ஆப்ரிக்க நாட்டிற்கு அடித்த மெகா ஜாக்பாட்! -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில்











Click it and Unblock the Notifications