Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜல்லிக்கட்டு நடத்த முயன்ற நத்தம் விஸ்வநாதன்.. தண்ணீர் பாக்கெட்களை வீசி விரட்டிய மக்கள்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: நத்தம் கோவில்பட்டியில் நடத்தப்படுவதாக இருந்த ஜல்லிக்கட்டு இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. நத்தம் விஸ்வநாதன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.

ஜல்லிக்கட்டு நடத்த பேச்சுவார்த்தை நடத்த வந்த ஜல்லிக்கட்டு குழுவினர் மீது தண்ணீர் பாக்கெட்டுகளை வீசி போராட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த கடும் எதிர்ப்பால் நத்தம் கோவில்பட்டியில் இன்று ஜல்லிக்கட்டை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது.

Ex minister Natham Viswanathan, push out from the Vaadivasal

வாடிவாசல் முன்பும், மாடுகள் வெளியேறும் பகுதியிலும் ஏராளமானவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வாடிவாசலுக்கு கொண்டு வரப்படும் காளைகளையும் திருப்பி அனுப்புகின்றனர். கிராம மக்களுக்கு ஆதரவாக மாணவர்களும், இளைஞர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே போலீசாருக்கும் கிராம மக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் ஜல்லிக்கட்டு போட்டிகளை தமிழக அரசு நடத்துவதில் சிக்கல் நீடிக்கிறது.

நத்தம் விஸ்வநாதன் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. நத்தம் உள்ளே வராதே.. அரசியல்வாதி உள்ளே வராதே என மக்கள் கோஷம் போட்டனர். முன்னாள் அமைச்சரான நத்தம் விஸ்வநாதன் ஜெயலலிதாவின் கடந்த ஆட்சி காலத்தில் அவருக்கு நெருக்கமானவராக இருந்தார். ஆனால் சசிகலா தரப்பு இவரை ஒதுக்கி வைத்துள்ளது.

ஜல்லிக்கட்டு நடத்தி மேலிடத்திடம் நல்ல பெயரை பெறலாம் என நினைத்து வந்த நத்தம் விஸ்வநாதன் முயற்சிக்கு தோல்வி கிடைத்துள்ளது. ஜல்லிக்கட்டு பிரச்சினையை தனது அரசியல் மைலேஜுக்கு பயன்படுத்த முனைந்த நத்தம் விஸ்வநாதன் செயல் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+