கச்சத்தீவை மீட்பதே பிரச்சினைக்கு தீர்வு.. நாகை மீனவர்களை சந்தித்த பின் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
இலங்கை அரசை கண்டித்து நாகையில் 2வது நாளாக மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் அமைச்சர்கள் ஜெயக்குமார், ஓ.எஸ்.மணியன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
நாகை: கச்சத்தீவை மீட்பதால் இந்தியாவின் கடல் எல்லை விரிவடைந்து மீனவர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நாகப்பட்டினத்தில் தெரிவித்தார்.
இலங்கை கடற்படை, ராமேஸ்வரம் மீனவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பிரிட்ஜோ என்ற இளைஞர் மரணமடைந்தார். மேலும் சாரோன் என்பவர் காயமடைந்தார். அதையடுத்து, இலங்கை நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து நாகை மீனவர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் அடுத்த கட்டமாக நேற்று முதல் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்களை அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் ஓ.எஸ்.மணியன் ஆகியோர் நேரில் சந்தித்து இன்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது போராட்டத்தை கைவிடுமாறு அமைச்சர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இலங்கை வசம் உள்ள படகுகளை விடுவித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். இதனால் நாகை மீனவர்களின் போராட்டம் தொடர்கிறது.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், நாகப்பட்டினம்: கச்சத்தீவை மீட்பதால் இந்தியாவின் கடல் எல்லை விரிவடைந்து மீனவர் பிரச்சனை தீர்வு கிடைக்கும். மீனவர்களுக்கு தமிழக அரசு என்றுமே உறுதுணையாக இருக்கும் எனக் கூறினார். மேலும் இரு நாட்டுக்கு இடையிலான பிரச்சனைகளை மத்திய அரசு தான் பேச வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications