"பொறுக்கிகளுக்கு' காண்டாமிருக தோலும், கழுதை மூளையும் தான் உள்ளது.. தொடர்ந்து சீண்டும் சாமி
"பொறுக்கிகளுக்கு' காண்டாமிருக தோலும், கழுதை மூளையும் தான் உள்ளது என தமிழர்களை தொடர்ந்து சுப்பிரமணிய சாமி தொடர்ந்து சீண்டி வருகிறார்.
சென்னை: தமிழர்களை வார்த்தைக்கு வார்த்தை பொறுக்கி என்று சுப்பிரமணிய சாமி கூறிவருகிறார். இந்நிலையில் தனது டிவிட்டர் பக்கத்தில் பொறுக்கிகளுக்கு காண்டா மிருக தோலும் கழுதை மூளையும் தான் உள்ளது என அவர் கூறியிருப்பது தமிழர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக மூத்த தலைவரான சுப்பிரமணிய சாமி தமிழர்களை தனது டிவிட்டர் பக்கத்தில் பொறுக்கிகள் என்றே கூறி வருகிறார். நேற்று தமிழக மீனவர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் மூக்கை நுழைத்த தமிழக பொறுக்கிகள் கட்டுமரத்துடன் சென்று இலங்கையிடம் சண்டையிட வேண்டும் என கூறியிருந்தார்.
இதற்கு அவரது டிவிட்டர் பக்கத்திலேயே ரீடிவிட் செய்த தமிழகர்கள் அவரை சரமாரியாக வசை பாடினர். இந்நிலையில் எதற்குமே அடங்காத சுப்பிரமணிய சாமி தமிழகர்களை கேவலப்படுத்தி மீண்டும் ஒரு சர்ச்சைக் கருத்தை தெரிவித்துள்ளார்.
One thing to note about Porkis. They have the skin of a rhino and and brain of a mule. Despite getting a hammering in twitter they want more
— Subramanian Swamy (@Swamy39) March 8, 2017
அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பொறுக்கிகள் பற்றி குறிப்பிட வேண்டிய ஒரு விஷயம். பொறுக்கிகள் காண்டாமிருக தோலையும் கழுதை மூளையையும் கொண்டுள்ளனர். டிவிட்டரில் சம்மட்டியடி கொடுத்தபோதும் அவர்கள் இன்னும் விரும்புகிறார்கள். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சுப்பிமணிய சாமியின் இந்த டிவிட்டுக்கு பதிலடி கொடுத்து ஏராளமனோர் வசை மாரி பொழிந்து வருகின்றனர். இருப்பினும் அசராத சுப்பிரமணிய சாமி தமிழர்களை தொடர்ந்து இழிவு படுத்தி வருகின்றார்.