மதுரைக்கும் பரவிய மெரினா மாணவர் போராட்டம்.. சாலை மறியலில் ஈடுபட்ட 50 மாணவர்கள் கைது
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து மதுரை தெப்பக்குளம் அருகே 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து அவர்களை போலீஸார் கைது செய்தனர்..
மதுரை: டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக மதுரையில் மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
பயிர்க் கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரணத்தை உயர்த்தி வழங்குதல், காவிரி மேலாண்மை வாரியம், நதி நீர் இணைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் கடந்த 15 நாள்களாக தமிழக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அருண் ஜேட்லியை சந்தித்தும் அவர்களது பிரச்சினைகளுக்கு முடிவு கிடைக்கவில்லை. இதனால் பல்வேறு நூதன போராட்டங்களில் விவசாயிகள் ஈடுபட்டு வருவதால் அவர்களது உடல்நலம் பாதிக்கப்படுகிறது.
இவர்களுக்கு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்த நிலையில் மெரினாவில் மாணவர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மாணவர்கள் போராட்டம் வெடித்தது. எனினும் போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
இந்நிலையில் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மதுரை தெப்பகுளம் அருகே 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து அவர்களை போலீஸார் கைது செய்தனர்.
இதேபோல் காஞ்சிபுரத்திலும் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் தொடங்கியுள்ளது. காஞ்சிபுரம் நகர்ப்பகுதியில் உள்ள நீர்த்தொட்டியின் மீது ஏறி தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது டெல்லியில் போராடும் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications