சுவாதி கொலை வழக்கில் ரகசியம் காக்க முடியாதா? காவல்துறை மீது ஹைகோர்ட் சாடல்
சென்னை: சுவாதி வழக்கில் ரகசியம் காக்க தவறிய தமிழக காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த மாதம் 24ம் தேதி காலை 6.40 மணியளவில், இன்போசிஸ் நிறுவன ஊழியர் சுவாதி, வாலிபரால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். தற்போது ராம்குமார் என்ற வாலிபர்தான் இக்கொலையை செய்ததாக கூறி அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆனால் கொலை நடந்த பிறகு முதல் 3 நாட்கள் வழக்கு கிணற்றில் போட்ட கல் போல அசைவற்று கிடந்தது. அந்த சூழ்நிலையில், ஜூன் 27ம் தேதி இந்த விவகாரம் குறித்து ஹைகோர்ட் நீதிபதிகள் நாகமுத்து மற்றும் பாரதிதாசன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் அரசு வழக்கறிஞரை அழைத்து கேள்வி கணைகளை தொடுத்தது.
2 நாட்கள் கால அவகாசம் தருகிறோம். வழக்கில் மெத்தனமாக இருந்தால் ஹைகோர்ட் தானாகவே முன்வந்து விசாரணையை நடத்த வேண்டிவரும் என்று எச்சரிக்கையும் விடுத்தது.
இந்நிலையில்தான், போலீசார் அதிரடி விசாரணை நடத்தி ராம்குமாரை கடந்த வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனர். தற்கொலைக்கு முயன்ற அவர் தற்போது ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், இன்று நீதிபதிகள் நாகமுத்து மற்றும் பாரதிதாசன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் மீண்டும், தமிழக அரசுக்கு சரமாரி கேள்விகளை கேட்டது. காவல்துறை தனது விசாரணையை ரகசியமாக மேற்கொள்ள முடியவில்லை என்றும் கோர்ட் கண்டித்தது.
அரசு வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தியிடம் நீதிபதிகள் அடுக்கடுக்காக கேட்ட கேள்விகள் இவைதான்:
சுவாதி கொலை வழக்கில் ராம்குமார்தான் குற்றவாளி என்று காவல்துறை முடிவு செய்தது எப்படி?
நீதிமன்றத்தில் வழக்கு வரும் முன்பே, ராம்குமார் சிகிச்சை பெறும் புகைப்படமும், வாக்குமூலத்தில் கூறிய தகவலும் ஊடகங்களில் வெளியானது எப்படி?
குற்றவியல் நடைமுறைகளை போலீசார் அப்பட்டமாக மீறியுள்ளனர். இது எப்படி நடந்தது? என்பது போன்ற கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர்.
மேலும், சுவாதி வழக்கை நீதிமன்றம் நேரடியாக கண்காணிக்காது என்றும் அறிவித்தனர்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications