சபரிமலை செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு.. நீதிமன்றம் போட்ட உத்தரவு! எருமேலியில் வரப்போகும் மாற்றம்
திருவனந்தபுரம்: கேரளாவில் சபரிமலை சீசன் தொடங்கியிருக்கிறது. சுவாமி தரிசனத்திற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் வருகின்றனர். இந்நிலையில் சபரிமலையில் ரசாயன குங்குமம் மற்றும் ஷாம்பு பாக்கெட்களை விற்க கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது.
முன்னதாக ரசாயன குங்குமத்திற்கும், ஷாம்புக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதை எதிர்த்து சபரிமலை/எருமேலியில் கடைகளை நடத்துபவர்கள் இடைக்கால மனுவை தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவில், இந்தத் தடை தங்கள் வணிகத்தை பாதிக்கும் என்பதால், அதை நீக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தனர்.

மேலும், "சபரிமலை மரபுகளின் ஒரு பகுதியாக குங்குமம் இன்றியமையாதது. இரசாயன குங்குமம் தடை செய்யப்பட்டால், ஏற்கனவே குங்கும சப்ளையர்களுக்கு வழங்கப்பட்ட முன்பணம் பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தும் என்றும், அதில் இரசாயனம் உள்ளதா என்பதை அறிய அறிவியல் ஆதாரம் இல்லை" என்று கூறியிருந்தனர். இது தொடர்பான வழக்கு நீதிபதிகள் ராஜா விஜயராகவன் வி. மற்றும் கே.வி. ஜெயகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அதில் நீதிபதிகள் கூறியதாவது, "ஒரு கடையில் வணிகம் செய்வதற்கான குத்தகை பெற்றுவிட்டால், இரசாயனம் கலந்த குங்குமத்தை விற்கலாம் என்று அனுமதிக்க முடியாது. இயற்கையான குங்குமம் விற்பதற்கு நாங்கள் எந்தத் தடையும் விதிக்கவில்லை. கடைக்காரர்கள் குங்குமம் விற்க விரும்பினால், அது இயற்கையாகவே பெறப்பட்டது, இரசாயனம் கலந்தது அல்ல என்பதை அவர்கள் உறுதிப்படுத்த வேண்டும். இரசாயன குங்குமத்தை சன்னிதானம் அல்லது எருமேலி பகுதியில் விற்க எந்தக் காரணத்திற்காகவும் அனுமதிக்கப்படாது.
சபரிமலையின் சுற்றுச்சூழல் மற்றும் பக்தர்களின் நலனே முதன்மையானது. வணிக நோக்கங்கள் எங்களுக்கு முக்கியம் இல்லை. இரசாயனம் கலந்த குங்குமத்திற்குப் பதிலாக, பாரம்பரிய மற்றும் இயற்கையாகக் கிடைக்கும் குங்குமத்தை மட்டுமே விற்க வேண்டும். நீங்கள் ஒரு விநியோகஸ்தரிடமிருந்து குங்குமத்தைப் பெறும்போது, அது பாரம்பரியமானதா அல்லது ரசாயனம் கலந்ததா என்று கேளுங்கள். சந்தேகம் இருந்தால், விற்காதீர்கள். மீறி விற்றால், உங்கள் குத்தகை ரத்து செய்யப்படும்.
என்னுடைய கடையில் விற்கப்படும் அனைத்து குங்குமமும் இயற்கையான மூலப்பொருட்களிலிருந்து பெறப்பட்டவை என்று அதிகாரிகளிடம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுங்கள்" என்று நீதிமன்றம் கூறியிருக்கிறது.
இரசாயனம் கலந்த குங்குமத்தில் காப்பர் சல்பேட் பச்சை, லெட் ஆக்சைடு, கார்பன் பிளாக், அலுமினியம் ப்ரோமைட், ரெட் மெர்குரி சல்பைட் (வெர்மிலியன்), அசோ சாயங்கள், பிரஷியன் ப்ளூ மற்றும் கோபால்ட் கலவைகள் இருப்பதாக நீதிமன்றம் குற்றம்சாட்டி இருக்கிறது. இத்தகைய இரசாயனங்கள் தோல் நோய்கள், கண் எரிச்சல், சுவாசப் பிரச்சனைகள், உடல் நச்சுத்தன்மை மற்றும் நீண்டகால புற்றுநோய் விளைவுகளை ஏற்படுத்தும் என்றும், இந்த ரசாயனங்கள் நீர்நிலைகளில் கலக்கும்போது, நீர்வாழ் உயிரினங்களுக்கு தீங்கு விளைவிப்பதாகவும், கேரளாவின் நன்னீர் இனங்கள் குறிப்பாக பாதிக்கப்படுவதாகவும் நீதிமன்றம் தெரிவித்தது.
இந்த உத்தரவு மூலம் இனி சபரிமலையில் ரசாயன குங்கும் விற்பனை முடிவுக்கு வரும் என்றும், பக்தர்களின் நலன் பாதுகாக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
-
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும்












Click it and Unblock the Notifications