விவசாயிகளை காப்பாற்ற.. களப்போராளிகள் தேவை.. இயக்குநர் தங்கர் பச்சான் அழைப்பு
விவசாயிகளை காப்பாற்ற திரைப்பட இயக்குநர் தங்கர் பச்சான் புது அமைப்பு ஒன்றை தொடங்கியுள்ளார். அதில் உறுப்பினர்களை சேர்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சென்னை: விவசாயம் மற்றும் விவசாயிகளின் நலன் காக்க இயக்குநர் தங்கர் பச்சான் அமைப்பு ஒன்றை தொடங்கியுள்ளார்.
இதுகுறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் தங்கர் பச்சானின் பதிவு:
உடலில் தீப்பிடித்துக்கொண்டவனை காப்பாற்ற எவரும் வரமாட்டார்கள் என்பது போலத்தான் விவசாயத்தையும், விவசாயிகளையும் காப்பாற்ற வர மறுக்கிறார்கள்.

சுயலாபத்திற்காக இணைய வேண்டாம்
நமது இயக்கம் அரசியல் சார்பற்ற இயக்கம். அரசியல் கட்சிகளில் இணைந்தால் பலனை அடையலாம் என்பது போல சுயலாப சிந்தனைகளோடு நமது இயக்கத்தில் இணைய வேண்டாம். மக்கள் நலன் குறித்து சமூக அக்கறையுள்ளவர்கள் மட்டும் இயக்கத்தில் இணைய வேண்டுகிறேன்.

களப்போராளிகள் தேவை
நமது இயக்கத்தில் இதுவரை விண்ணப்பித்தவர்கள் அனைவரையும் சேர்த்துக் கொள்ளவில்லை. இந்த இயக்கத்திற்கு தேவைப்படுபவர்கள் அரசியல் கட்சிகளில் உள்ளதுபோல் இலட்சக்கணக்கான உறுப்பினர்கள் அல்ல. களப்போராளிகளும், பயிற்சியாளர்களும் தான்.

நேரில் சந்திப்பு
இயக்கத்தின் முதன்மை உறுப்பினர்கள் ஒன்று கூடி செயல்திட்டங்கள் தீட்டி அதனை ஆவணப்படுத்தும் பணிகள் நிறைவடையும் வேளையில் இருக்கிறது. ஒரு பெயரை இயக்கத்திற்கு தேர்வு செய்து அதனைப் பதிவு செய்வதற்காகவும் களப்பயிற்சிக்காகவும், பணிக்காகவும், போராட்டத்திற்காகவும் யார் யார் தங்களை இணைத்துக் கொள்ள விரும்புகிறார்கள் என்பதை முடிவு செய்யவும், தமிழகம் முழுவதிலும் மூன்று இடங்களில் (சென்னை, மதுரை, கோயம்புத்தூர்) உங்களை நேரில் சந்திக்க விரும்புகின்றேன்.

எங்கே.. எப்போது
யார் யார் வர விருப்பம் தெரிவிக்கின்றீர்கள் என்பதை பொறுத்தே சந்திக்கும் அரங்கமும், நாளும் இறுதி செய்யப்படும். ஒரு அரசு செய்ய முடியாததை, எவ்வளவு பெரிய நிறுவனமும் செய்ய முடியாததை நம் இயக்கம் செய்து காண்பித்து இந்த நாட்டிற்கே முன்னுதாரணமாகத் திகழப் போகிறது.

உழவை மீட்டுப்போம்..
அதனை நிகழ்த்திக்காட்டும் கட்டாயப்பணியில் தமிழகத்தில் பிறந்த ஒவ்வொரு இளைஞனும் இணைந்து அழிந்துவரும் உழவுத் தொழிலை மீட்டெடுத்து இலாபகரமானதாக்கி நமது இளைய தலைமுறையிடம் ஒப்படைக்க வேண்டும். மறவாமல் உங்களின் பதிலைத் தெரிவிப்பதைப் பொறுத்துதான் அடுத்தக்கட்டப் பணியைத் தொடர முடியும்.
இணைவோம்! செயல்படுத்துவோம்! உழவே தலை என்பதை நிலை நாட்டுவோம்!!

இணைய..
இயக்கத்தின் புலனம் எண் (WHATSAPP) : +91 9940695337 இயக்கத்தில் இணைவதற்கு இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும். இவ்வாறு தங்கர் பச்சான் கூறியுள்ளார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications