ஜெ.யின் பேச்சுத் திறமை: தமிழகத்திற்கு நபார்டு வங்கி ரூ.50 கோடி கூடுதல் ஒதுக்கீடு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பேச்சுத் திறமையால் கவரப்பட்ட நபார்டு வங்கி ஏற்கனவே திட்டமிடப்பட்ட ரூ.350 கோடிக்குப் பதிலாக ரூ.400 கோடி தருவதாக உறுதியளித்துள்ளது.

விவசாய மற்றும் ஊரக வளர்ச்சித் திட்டங்களுக்காக ஆண்டு தோறும் நபார்டு வங்கி நிதி வழங்கி வருகிறது.

விவசாயம், கூட்டுறவு, கல்வி, உடல் நலம், நெடுஞ்சாலை, கைத்தறி மற்றும் ஊரகத் தொழிற்சாலைகள் ஆகிய துறைகளுக்கு இந்த நிதி பகிர்ந்து அளிக்கப்படும்.

இந்த ஆண்டு (2002-03) தமிழகத்திற்கு ரூ.350 கோடியை ஒதுக்க நபார்டு வங்கி திட்டமிட்டிருந்தது. இதை முன்னிட்டு நபார்டு வங்கியின் தலைவர் ஒய்.சி. நந்தா உள்ளிட்ட குழுவினர் இன்று ஜெயலலிதாவைச் சந்தித்தனர்.

அப்போது பள்ளிகளை மேம்படுத்துவது, ஆரம்ப சுகாதார நிலையங்களின் தரத்தை உயர்த்துவது உள்ளிட்ட பல விவரங்களையும் அவற்றுக்கான தேவைகளையும் "அக்கு வேறு ஆணி வேறாக" நபார்டு வங்கிக் குழுவினரிடம் ஜெயலலிதா விளக்கிக் கூறினார்.

ஜெயலலிதாவின் இந்தப் பேச்சினால் கவரப்பட்ட நபார்டு வங்கிக் குழுவினர் ஒதுக்கப்பட்ட தொகை போக மேலும் ரூ.50 கோடியையும் சேர்த்து அளிப்பதாக உறுதியளித்தனர்.

இதையடுத்து நபார்டு வங்கியிடமிருந்து ரூ.400 கோடி தொகை தமிழகத்திற்குக் கிடைக்கவுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+