Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாரதி பக்கம்

Subscribe to Oneindia Tamil

ஞிணிடூணிணூ="ஆடூதஞு">

மற்றுள பெரியோர்கள் - தமை
வாழ்த்தி உள்ளன்பொடு வணங்கி நின்றார்
கொற்றமிக் குயர்கன்னன் - பணிக்
கொடியோன் இளையவர் சகுனியொடும்
பொற்றடந் தோள் சருவப் - பெரும்
புகழினர், தழுவினர், மகிழ்சிகொண்டார்,
நற்றவக் காந்தாரி -முதல்
நாரியர் தலைமுறைப் பாடிதொழுதார். (159)


குந்தியும் இளங்கொடி யும் - வந்து
கூடிய மாதர் நம்மொடு குலவி
முந்திய கதைகள் சொல்லி - அன்பு
முணடுரை ? யாடிப்பின் பிரிந்து விட்டார்
அந்தியும் புருந்ததுவால் - பின்னர்
ஐவரும் உடல்வலித் தொழில் முடித்தே
சந்தியுஞ் சபங்களுஞ் செய் - தங்கு
சாருமின் ணுணவமு துணடதன் பின் (160)


சந்தன மலர்புனைத் தே - இளந்
தையலர் வீணைகொண் டுயிருக்கி
விந்தைகொள்பாட்டிசைப்ப-அதை
விழைவொடு கேட்டனர் துயில் புரி ந்தார்
வந்ததொர் துன்பத்தினை - அங்கு
மடித்திட லன்றிப் பின்தருந் துயர்க்கே
சிந்தனை உழல்வா ரோ? - உளச்
சிதைவின்மை ஆரியர் சிறப்பன் றோ? (161)

(அடுத்தது பாண்டவர் சபைக்கு வருதல்)
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+