For Quick Alerts
For Daily Alerts
Just In
பாரதி பக்கம்
ஞிணிடூணிணூ="ஆடூதஞு">
மற்றுள பெரியோர்கள் - தமை
வாழ்த்தி உள்ளன்பொடு வணங்கி நின்றார்
கொற்றமிக் குயர்கன்னன் - பணிக்
கொடியோன் இளையவர் சகுனியொடும்
பொற்றடந் தோள் சருவப் - பெரும்
புகழினர், தழுவினர், மகிழ்சிகொண்டார்,
நற்றவக் காந்தாரி -முதல்
நாரியர் தலைமுறைப் பாடிதொழுதார். (159)
குந்தியும் இளங்கொடி யும் - வந்து
கூடிய மாதர் நம்மொடு குலவி
முந்திய கதைகள் சொல்லி - அன்பு
முணடுரை ? யாடிப்பின் பிரிந்து விட்டார்
அந்தியும் புருந்ததுவால் - பின்னர்
ஐவரும் உடல்வலித் தொழில் முடித்தே
சந்தியுஞ் சபங்களுஞ் செய் - தங்கு
சாருமின் ணுணவமு துணடதன் பின் (160)
சந்தன மலர்புனைத் தே - இளந்
தையலர் வீணைகொண் டுயிருக்கி
விந்தைகொள்பாட்டிசைப்ப-அதை
விழைவொடு கேட்டனர் துயில் புரி ந்தார்
வந்ததொர் துன்பத்தினை - அங்கு
மடித்திட லன்றிப் பின்தருந் துயர்க்கே
சிந்தனை உழல்வா ரோ? - உளச்
சிதைவின்மை ஆரியர் சிறப்பன் றோ? (161)
(அடுத்தது பாண்டவர் சபைக்கு வருதல்)
Comments
தமிழ் literature இலக்கியம் poems songs thiruvalluvar art culture bharathi music கலை tamilnadu article kural bharatham essay short stories kalki குறள்
Story first published: Saturday, February 12, 2000, 16:50 [IST]