பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
யேசு கிறிஸ்து
ஈசன் வந்து சிலுவையில் மாண்டான்,
எழுந்து யிரித்தனன், நாள் ஒரு மூன்றின்
நேசமா மரியா மக்த லேநா
நேரிலே இந்தச் செய்தியைக் கண்டாள்.
தேசத் தீர் இதன் உட்பொருள் கேளீர்;
தேவர் வந்து நமக்குட் புகுந்தே
நாசமின்றி நமை நித்தங் காப்பார்,
நம் அகந்தையை நாம் கொன்று விட்டால். (1)
எழுந்து யிரித்தனன், நாள் ஒரு மூன்றின்
நேசமா மரியா மக்த லேநா
நேரிலே இந்தச் செய்தியைக் கண்டாள்.
தேசத் தீர் இதன் உட்பொருள் கேளீர்;
தேவர் வந்து நமக்குட் புகுந்தே
நாசமின்றி நமை நித்தங் காப்பார்,
நம் அகந்தையை நாம் கொன்று விட்டால். (1)
அன்புகாண் மரியா மத்த லேநா,
ஆவி காணுதிர் யேசு கிறிஸ்து:
முன்பு தீமை வடிவினைக் கொன்றால்
மூன்று நாளினில் நல்லுயிர் தோன்றும்;
பொன்பொ லிந்த முகத்தினிற் கண்டே
போற்றுவாள் அந்த நல்லுயிர் தன்னை,
அன்பெனும் மரியா மத்த லேநா
ஆஹ! சாலப் பெருங்களி யீஃதே. (2)
உண்மை யென்ற சிலுவையிற் கட்டி
உணர்வை ஆணித் தவங் கொண் டடித்தால்,
வண்மைப்பேருயிர் யேசு கிறிஸ்து
வான் மேனியில் அங்கு விளங்கும்
பெண்மைகாண் மரியா மக்த லேநா,
பேணும் நல்லறம் யேசு கிறிஸ்து ,
நுண்மை கொண்ட பொருளிது கண்டீர்
நொடியிலிஃது பயின்றிட லாகும். (3)
(தொடரும்)












Click it and Unblock the Notifications