பாரதி பக்கம்

Subscribe to Oneindia Tamil

அந்திப் பொழுது

காவென்று கதிதடுங் காக்கை - என்றன்
கண்ணுக் கினிய கருநிறக் காக்கை,
மேவிப் பலகிளை மீதில் - இங்கு
விண்ணிடை அந்தப் பொழிதினைக் கண்டே,
கூவித் திரியும் சிலவே - சில
கூட்டங்கள் கூடித் திசைதோறும் போகும்.
தேவி பராசக்தி யன்னை - விண்ணிற்
செவ்வொளி காட்டிப் பிறைதலைக் கொண்டாள். (1)


தென்னை மரக்கிளை மீதில் - அங்கோர்
செல்லப் பசுங்கிளி கீச்சிட்டுப் பாயும்.
சின்னஞ்சிறிய குருவி - அது
ஜிவ் வென்று விண்ணிடை யூசலிட் டேகும்.
மன்னப் பருந்தொ ரிரண்டு - மெல்ல
வட்ட மிட்டுப் பின் நெடுந்தொலை போகும்.
பின்னர் தெரிவிலொர் சேவல் - அதன்
பேச்சினிலே சக்தி வேல் என்று கூவும். (2)


செவ்வொளி வானில் மறைந்தே - இளந்
தேன்நில வெங்கும் பொழிந்தது கண்டீர்!
இவ்வள வான பொழுதில் - அவள்
ஏறிவந்தே யுச்சி மாடத்தின் மீது
கொவ்வை யிதழ்நகை வீச - விழிக்
கோணத்தைக் கொண்டு நிலவைப் பிடித்தாள்.
செவ்விது, செவ்விது,பெண்மை - ஆ!
செவ்விது, செவ்விது, செவ்விது காதல்! (3)

(தொடரும்)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+