பாரதி பக்கம்
மார்ச் 02, 2001
தேசிய கீதங்கள்
நாம் என்ன செய்வோம்
தாளம் - ரூபகம்
நாம் என்ன செய்வோம் புலையரே! - இந்தப்
பூமியிலில்லாத புதுமையைக் கண்டோம்
பல்லவி
நாம் என்ன செய்வோம், துணைவரே! - இந்தப்
பூமியிலில்லாத புதுமையைக் கண்டோம். (நாம்)
சரணங்கள்
1.திலகன் ஒரு வனாலே இப்படி யாச்சு
செம்யுைம் தீமையும் இல்லாமலே போச்சு:
பல திசையும் துஷ்டர் கூட்டங்களாச்சு
பையல்கள் நெஞ்சில் பயமென்பதே போச்சு (நாம்)
2.தேசத்தில் எண்ணற்ற பேர்களுங் கெட்டார்
செய்யுந் தொழில் முறை யாவையும் விட்டார்:
பேசுவோர் வார்த்தை நாதா சொல்லிவிட்டார்
பின்வர வறியாமல் சுதந்திரம் தொட்டார் (நாம்)
3.பட்டம் பெற் றோர்குமதிப் பென்பது மில்லை
பரதேசிப் பேச்சில் மயங்குபவ ரில்லை
சட்டம் மறந்தோர்க்குப் பூஜை குறையில்லை
சர்க்காரி டம்சொல்லிப் பார்த்தும் பயனில்லை (நாம்)
4.சீமைத் துணியென்றால் உள்ளம் கொதிக்கிறார்
சீரில்லை என்றாலோ எட்டி மிதிகிகறார்
நாமெத் தையோ வந்தே யென்று துதிக்கிறார்
தரமற்ற வார்த்தைகள் பேசிக் குதிக்கிறார். (நாம்)












Click it and Unblock the Notifications