பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
ஏப்ரல் 02, 2001
சுயசரிதை
பொறுமையின் பெருமை
திருக்கொலுவீற் றிருக்கும்தன் பொருளைக் கேளீர்!
திருத்தணிகை யென் பதிங்கு பொறுமையின் பேர்,
செந்தமிழ்கண் டீர், பகுதி தணி யெனுஞ்சொல்,
பொருத்தமுறுந் தணிகையினால் புலமை சேரும்,
பொறுத்தவரே பூமி யினை ஆள்வார் என்னும்
அருத்தமிக்க பழமொழியும் தமிழி லுண்டாம்.
அவணியிலே பொறையுடையான் அவனே தேவன்! (11)
பொறுமையிலே, அறக்கடவுள் புதல்வ னென்னும்
யுதிட்டிரனும் நெடுநாளிப் புவிமேல் காத்தான்
இறுதியிலே பொறுமை நெறி தவறிவிட்டான்
ஆதலாற் போர்புரிந்தான் இளையரோடே:
போர்க்களத்தே அழித்துவிட்டுப் பணியின் மீது
வறுமையயுங் கலியினையும் நிறுத்தி விட்டு
மலைமீது சென்றான்பின் வா னஞ் சென்றான். (12)
(தொடரும்)












Click it and Unblock the Notifications