For Daily Alerts
Just In
பாரதி பக்கம்
ஏப்ரல் 03, 2001
சுயசரிதை
(தொடர்ச்சி)
அநியாய மரணமெய்தல் கொடுமை யன்றோ?
தேனான உயிரைவிட்டுச் சாக லாமோ?
செத்திடற்குக் காரணந்தான் யாதென் பீரேல்,
கோனாகிச் சாத்திரத்தை யாளு மாண்பார்
ஜகதீச சந்த்ரவஸு கூறு கின்றான்:
(ஞானானு பவத்திலிது முடிவாங் கண்டீர்!)
நாடியிலே அதிர்ச்சியினால் மரணம் என்றான். (13)
கோபத்தால் நாடியிலே அதிரச்சியுண்டாம்!
கொடுங்கோபம் பேரதிர்ச்சி, சிறிய கோபம்
ஆபத்தாம், அதிர்ச்சியிலே சிறிய தாகும்:
அச்சத்தால் நாடியெல்லாம் அவிந்து போகும்:
தாபத்தால் நாடியெல்லாம் சிதைந்து போகும்:
கவலையினால் நாடியெல்லாம் தழலாய் வேகும்:
கோபத்தை வென்றிடலே பிறவற் றைத்தான்
கொல்வதற்கு வழியெனநான் குறித்திட்டேனே. (14)
(தொடரும்)
Comments
Story first published: Wednesday, February 7, 2001, 16:50 [IST]