For Daily Alerts
Just In
பாரதி பக்கம்
ஏப்ரல் 06, 2001
குருக்கள் துதி (குள்ளச்சாமி புகழ்)
(தொடர்ச்சி)
தேவர் பிரான் என்றுரைப்பார்: தெளிந்த ஞானி
பாசத்தை அறுத்துவிட்டான், பயத்தைச் சுட்டான்:
பாவனையால் பாவெளிக்கு மேலே தொட்டான்:
நாசத்தை அழித்துவிட்டான்: யமனைக் கொன்றான்:
ஞானகங்கை தனைமுடிமீ தேந்தி நின்றான்:
ஆசையெனும் கொடிக்கொருதாழ் மரமே போன்றான்,
ஆதியவன் சுடர்பாதம் புகழ்கின் றேனே. (21)
வாயினால் சொல்லிடவும் அடங்கா தப்பா:
வரிசையுடன் எழுதிவைக்க வகையும் இல்லை:
ஞாயிற்றைச் சங்கிலியால் அளக்க லாமோ?
ஞானகுரு புகழினை நாம் வகுக்க லாமோ?
ஆயிரநூல் எழிதிடினும் முடிவு றாதாம்:
ஐயனவன் பெருமையைநான் சுருக்கிச் சொல்வேன்:
காயகற்பஞ் செய்துவிட்டான்: அவன் வாழ் நாளைக்
கணக்கிட்டு வயதுரைப்பார் யாரும் இல்லை. (22)
(தொடரும்)
Comments
Story first published: Wednesday, February 7, 2001, 16:50 [IST]