பாரதி பக்கம்
ஆகஸ்டு 06, 2001
பாரத ஜனங்களின் தற்கால நிலைமை
5.
சாத்திரங்கள் ஒன்றும் காணார் - பொய்ச்
சாத்திரப் பேய்கள் சொல்லும் வார்த்தை நம்பியே
கோத்திரம் ஒன்றா யிருந்தாலும் ஒரு
கொள்கையிற் பிரிந்தவனைக் குலைத் திகழ் வார்:
தோத்திரங்கள் சொல்லி அவர்தாம் - தமைச்
சூதுசெய்யும் நீசர்களைப் பணிந்திடுவார்:
ஆத்திரங் கொண்டே இவன் சைவன் - இவன்
அரிபக்தன் என்று பெருஞ் சண்டையிடுவார் (நெஞ்சு)
6.
நெஞ்சு பொறுக்கு திலையே - இதை
நினைந்து நினைந்திடினும் வெறுக்குதிலையே:
கஞ்சி குடிப்பதற் கிலார் - அதன்
காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார்
பஞ்சமோ பஞ்சம் -நிதம்
பரிதவித்தே உயிர் துடிதுடித்துத்
துஞ்சி மடிகின் றாரே - இவர்
துயர்களைத் தீர்க்கவோர் வழியிலையே. (நெஞ்சு)
7.
எண்ணிலா நோயுடையார் - இவர்
எழுந்து நடப்பதற்கும் வலியைமயிலார்
கண்ணிலார் குழந்தை கள்போல் - பிறர்
காட்டிய வழியிற் சென்று மாட்டிக் கொள்வார்:
நாலாயிரங் கோடி நயந்து நின்ற,
புண்ணிய நாட்டினிலே -இவர்
பொறியுற்ற விலங்குகள் போல வாழ்வார் (நெஞ்சு)
DVDSpecialsFine JewelryMusicArts&CraftPhone Cards