For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாரதி பக்கம்

By Staff
Google Oneindia Tamil News

ஆகஸ்டு 06, 2001

Subramaniya Bharathi

பாரத ஜனங்களின் தற்கால நிலைமை

(தொடர்ச்சி)

5.
சாத்திரங்கள் ஒன்றும் காணார் - பொய்ச்
சாத்திரப் பேய்கள் சொல்லும் வார்த்தை நம்பியே
கோத்திரம் ஒன்றா யிருந்தாலும் ஒரு
கொள்கையிற் பிரிந்தவனைக் குலைத் திகழ் வார்:
தோத்திரங்கள் சொல்லி அவர்தாம் - தமைச்
சூதுசெய்யும் நீசர்களைப் பணிந்திடுவார்:
ஆத்திரங் கொண்டே இவன் சைவன் - இவன்
அரிபக்தன் என்று பெருஞ் சண்டையிடுவார் (நெஞ்சு)

6.
நெஞ்சு பொறுக்கு திலையே - இதை
நினைந்து நினைந்திடினும் வெறுக்குதிலையே:
கஞ்சி குடிப்பதற் கிலார் - அதன்
காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார்
பஞ்சமோ பஞ்சம் -நிதம்
பரிதவித்தே உயிர் துடிதுடித்துத்
துஞ்சி மடிகின் றாரே - இவர்
துயர்களைத் தீர்க்கவோர் வழியிலையே. (நெஞ்சு)

7.
எண்ணிலா நோயுடையார் - இவர்
எழுந்து நடப்பதற்கும் வலியைமயிலார்
கண்ணிலார் குழந்தை கள்போல் - பிறர்
காட்டிய வழியிற் சென்று மாட்டிக் கொள்வார்:
நாலாயிரங் கோடி நயந்து நின்ற,
புண்ணிய நாட்டினிலே -இவர்
பொறியுற்ற விலங்குகள் போல வாழ்வார் (நெஞ்சு)

(தொடரும்)


DVDSpecialsFine JewelryMusicArts&CraftPhone Cards
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X