For Daily Alerts
Just In
பாரதி பக்கம்
நவம்பர் 06, 2001
கோக்கலே சாமியார் பாடல்
(இராமலிங்க சுவாமிகள் களக்கமறப் பொது நடனம்
நான் கண்டு கொண்ட தருணம் என்று பாடிய பாட்டைத் திரித்து பாடியது)
நான் கண்டு கொண்ட தருணம் என்று பாடிய பாட்டைத் திரித்து பாடியது)
களக்கமுறும் மார்லிநடம் கண்டுகொண்ட தருணம்
கடைச்சிறியேன் உளம்பூத்துக் காய்த்ததொரு கனிதான்
விளக்முறப் பழுத்திடுமோ? வெம்பிவிழுந் திடுமோ?
வெம்பாது விழினுமென்றன் கரத்திலகப் படுமோ?
வளர்த்தபழம் கர்சானென்ற குரங்கு கவர்ந் திடுமோ?
மற்றிங்ஙன் ஆட்சிசெய்யும் அணில்கடித்து விடுமோ?
துளக்கமற யான்பெற்றிங் குண்ணுவனோ அல்லால்
தொண்டை வலிக்குமோ ஏதும் சொல்லரிய தாமோ?
(தொடரும்)
DVDSpecialsFine JewelryMusicArts&CraftPhone Cards
Comments
Story first published: Wednesday, February 7, 2001, 16:50 [IST]