பாரதி பக்கம்

Subscribe to Oneindia Tamil

செப்டம்பர் 09, 2001

Subramaniya Bharathi

பாரத ஜனங்களின் தற்கால நிலைமை

(நொண்டி சிந்து)

3. சிப்பாயைக் கண்டு அஞ்சுவார் - ஊர்ச்
சேவகன் வருதல்கண்டு மனம்பதைப்பார்:
துப்பாக்கி கொண்டு ஒருவன் வெகு
தூரத்தில் வரக்கண்டு வீட்டில்வொளிப்பார்:
அப்பால் எவனோ செல்வான் - அவன்
ஆடையைக் கண்டுபயந் தெழுந்துநிற்பார்:
எப்போதும் கைகட்டுவார்- இவர்
யாரிடத்தும் பூனைகள்போல் ஏங்கி நடப்பார். (நெஞ்சு)


4. நெஞ்சு பொறுக்கு திலையே - இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந் துவிட்டால்,
கொஞ்சமோ பிரிவினைகள்? - ஒரு
கோடிஎன் றால்அது பெரிதாமோ?
ஐந்துதலைப் பாம்பென் பான் - அப்பன்
ஆறுதலை யென்றுமகன் சொல்லி விட்டால்,
நெஞ்சு பிரிந்திடு வார் - பின்பு
நெடுநாள் இருவரும் பகைத்திருப்பர். (நெஞ்சு)

(தொடரும்)


DVDSpecialsFine JewelryMusicArts&CraftPhone Cards
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+