For Daily Alerts
Just In
பாரதி பக்கம்
கண்ணம்மாவின் நினைப்பு
பல்லவி
நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி - கண்ணம்மா!
தன்னை யே சகியென்று சரணமெய்தினேன் ( நின்னையே)
சரணங்கள்
பொன்னையே நிகர்த்த மேனி மின்னை யே நிகர்த்த சாயற்
பின்னை யே! - நித்ய கன்னியே! கண்ணம்மா! (நின்)
மார னம்புக ளென்மீது வாரி வாரிவீச நீ - கண்
பாரா யோ? வந்து சோரா யோ? கண்ணம்மா? (நின்)
யாவு மே சுக முனிக்கொர் ஈசனா மெனக்குள் தோற்றம்
மேவுமே - இங்கு யாவுமே, கண்ணம்மா! (நின்)
(தொடரும்)
Story first published: Wednesday, February 7, 2001, 16:50 [IST]