பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
மே 11, 2001
இரண்டாங் கிளை: புகழ்
ஞாயிறு
10.
பூமி, சந்திரன், செவ்வாய்,புதன், சனி, வெள்ளி, வியாழன், யுரேனஸ், நெப்தியூன் முதலிய பல நூறு வீடுகள்-
இவை எல்லாம் நின் கதிர்கள் பட்ட மாத்திரத்திலே ஒளியுறநகை செய்கின்றன.தீப்பந்திலிருந்து பொறிகள் வீசுவது போல,
இவையெல்லாம் ஞாயிற்றிலிருந்து வெடித்து வெளிப்பட்டன வென்பர்.இவற்றைக் காலம் என்னும் கள்வன் மருவினான்.
இவை ஒளி குன்றிப் போயின.
ஒளி யிழந்தன வல்ல குறைந்த ஒளி யுடையன.
ஒளியற்ற பொருள் சகத்திலே யில்லை.
இருளென்பது குறைந்த ஒளி.
செவ்வாய், புதன் முதலிய பெண்கள் ஞாயிற்ரை வட்டமிடுகின்றன.இவை தமது தந்தை மீது காதல் செலுத்துகின்றன.
அவன் மந்திரத்திலே கட்டுண்டு வரைகடலாது சுழல்கின்றன.
அவனுடைய சக்தி யெல்லையை என்றும் கடந்து செல்ல மாட்டா.
அவன் எப்போதும் இவற்றை நோக்கி யிருக்கின்றான்.
அவனுடைய ஒளிய முகத்தில் உடல் முழுதும் நனையும்
பொருட்டாகவே இவை உருளுகின்றன.
அவனொளியை இவை மலரிலும், நீரிலும், காற்றிலும் பிடித்து
வைத்துக் கொள்ளும்.
ஞாயிறு மிகச் சிறந்த தேவன், அவன் கைப்பட்ட இடமெல்லாம் உயிருண்டாகும்.
அவனையே மலர் விரும்புகின்றது.
இலைகள் அவனுடைய அழகிலே யோகமெய்தி யிருக்கின்றன.
அவனை நீரும், நிலமும்,காற்றும் உகந்து களியுறும்
அவனை வான் கவ்விக் கொள்ளும்.
அவனுக்கு மற்றெல்லாத் தேவரும் பணி செய்வர்,
அவன் புகழைப் பாடுவோம்,
அவன் புகழ் இனிது.
(தொடரும்)
DVD












Click it and Unblock the Notifications