பாரதி பக்கம்
ஏப்ரல் 12, 2001
கோவிந்தசாமி புகழ்
வண்மை திகழ் கோவிந்த ஞானி, பார்மேல்
யாங்கற்ற கல்வியெலாம் பலிக்கச் செய்தான்:
எம்பெருமான் பெருமையில் கிசைக்கக் கேளீர்!
தீங்கற்ற குணமுடையான் புதுவை யூரார்
செய்தபெருந் தவத்தாலே உதித்த தேவன்
பாங்குற்ற மாங்கொட்டைச் சாமி போலே
பயிலுமதி வர்ணாசிர மத்தே நிற்போன். (37)
அன்பினால் முக்தியென்றான் புத்தன் அந்நாள்:
அதனையிந்நாட் கோவிந்த சாமி செய்தான்:
துன்பமுறும் உயிர்களெல்லாம் தாயைப் போலே
சுரக்குமரு ளூடையபிரான் துணிந்த யோகி
அன்பினுக்குக் கடலையுந்தான் விழுங்க வல்லான்:
மன்பதைகள் யாவுமிங்கே தெய்வம் என்ற
மதியுடையான், கவலையெனும் மயக்கம் தீர்ந்தான்: (38)
பொன்னடியால் என்மனையைப் புனிதமாக்கப்
போத்தாளிம் முனியொருநாள்: இறந்த எந்தை
தன்னுருவங் காட்டினான்: பின்னர் என்னைத்
தரணிமிசைப் பெற்றவனின் வடிவ முற்றான்:
அன்னவன் யோகியென்றும் பரம ஞானத்
தனுபூதி யுடையனென்றும் அறிந்து கொண்டேன்:
மன்னவனைக் குருவெனநான் சரண டைந்தேன்:
மரணபயம் நீங்கினேன்: வலிமை பெற்றேன். (39)












Click it and Unblock the Notifications