பாரதி பக்கம்

Subscribe to Oneindia Tamil

ஜூன் 12, 2001

காக்கை பறந்து செல்லுகிறது.
காற்றின் அலைகளின் மீது நீந்திக் கொண்டு போகிறது.
அலைகள் போலிருந்து, மேலே காக்கை நீந்திச் செல்வதற்கு
இடமாகும் பொருள் யாது? காற்று,
அன்று, அஃதன்று காற்று.
அது காற்றின் இடம்: வாயு நிலயம்.
கண்ணுக்கு தெரியாதபடி அத்தனை நுட்பமாகிய பூதத்
தூள்களே (காற்றடிக்கும் போது) நம்மீது வந்து மோதுகின்றன.
அத்தூள்களை காற்றென்பது உலக வழக்கு.
அவை வாயு வல்ல: வாயு ஏறிவரும் தேர்.
பனிக்கட்டியிலே சூடேற்றினால் நீராக மாறி விடுகிறது.
நீரிலே சூடேற்றினால் வாயுவாகி விடுகிறது.
தங்கத்திலே சூடேற்றினால் திரவமாகிவிடுகிறது.
அத்திரவத்திலே சூடேற்றினால் வாயுவாகின்றது,
இங்ஙனமே,உலகத்துப் பொருள்களனைத்தையும் வாயு
நிலைக்கு கொண்டு வந்துவிடலாம்.
இந்த வாயு பொளதிகத் தூள்.
இதனை ஊர்ந்துவரும் சக்தியையே நாம் காற்றுத் தேவனென்று
வணங்குகிறோம்.
காக்கை பறந்து செல்லும் வழி காற்று.
அந்த வழியை இயக்குபவன் காற்று.
அதனை அவ்வழியிலே தூண்டிச் செல்பவன் காற்று.
அவனை வணங்குகின்றோம்.
உயிரைச் சரணடைகின்றோம்.

(தொடரும்)


DVDSpecialsFine JewelryMusicArts&CraftPhone Cards
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+