பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
ஏப்ரல் 13, 2001
யாழ்ப்பாணத்து சுவாமியின் புகழ்
குவலயத்தின் விழிப்போன்ற யாழ்ப்பா ணத்தான்
தேவிபதம் மறவாத தீர ஞானி
சிதம்பபரத்து நடராஜ மூர்த்தி யாவன்
பாவியரைக் கரையேற்ருறும் ஞானத் தோணி:
பரமபத வாயிலெனும் பார்வை யாளன்:
காவிவளர் தடங்களிலேஸ மீன்கள் பாயும்
கழனிகள் சூழ் புதுவையிலே அவனைக் கண்டேன். (40)
தங்கத்தாற் பதுமைசெய்தும் இரத லிங்கம்
சமைத்துமவற் றினிலீசன் தாளைப் போற்றும்
துங்கமுறு பக்தர்பலர் புவிமீ துள்ளார்:
தோழரே! எந்நாளும் எனக்குப் பார்மேல்
மக்களஞ்சேர் திருவிழியால் அருளைப் பெய்யும்
வானவர்கோன் யாழ்ப்பாணத் தீரன் தன்னைச்
சங்கரனென் றெப்போதும் முன்னே கொண்டு
சரணடைந்தால் அது கண்டீர் சர்வ சித்தி. (41)
(தொடரும்)












Click it and Unblock the Notifications