For Quick Alerts
For Daily Alerts
Just In
பாரதி பக்கம்
ஏப்ரல் 17, 2001
காதலின் புகழ்
கலவியிலே மானுடர்க்கு கவலை தீரும்:
காதலினால் மானுடர்க்கு கவிதை யுண்டாம்:
கானமுண்டாம்: சிற்பமுதற் கலைக ளுண்டாம்:
ஆதலினால் காதல் செய்வீர்: உலகத்தீரே!
அஃதன்றோ இவ்வுலகத் தலைமை யின்பம்:
காதலினால் சாகாம லிருத்தல் கூடும்:
கவலைபோம். அதனாலே மரணம் பொய்யாம். (49)
ஆதி சக்தி தனையுடம்பில் அரனும் கோத்தான்:
அயன்வாணி தனைநாவில் அமர்த்திக் கொண்டான்:
சோதிமணி முகத்தினளைச் செல்ல மெல்லாம்
சுரந்தருளும் விழியாளைத் திருவை மார்பில்
மாதவனும் ஏந்தினான்: வானோர்க் கேனும்
மாதரின்பம் போற்பிறிதோர் இன்பம் உண்டோ?
காதல்செயும் மனைவியே சக்தி கண்டீர்
கடவுள் நிலை அவளாலே எய்த வேண்டும். (50)
(தொடரும்)
Comments
Story first published: Wednesday, February 7, 2001, 16:50 [IST]