பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
மே 18, 2001
3
காட்டிலே காதலனை நாடிச் சென்ற ஒரு பெண் தனியே
கலங்கிப் புலம்பினாள்.
ஒளிவந்தது.: காதலன் வந்தான். பெண் மகிழ்ந்தாள்.
பேயுண்டு, மந்திரமுண்டு.
பேயில்லை, மந்திரமில்லை.
நோயுண்டு, மருந்துண்டு.
அயர்வு கொல்லும். அதனை ஊக்கம் கொல்லும்.
அவித்தை கொல்லும். அதனை வித்தை கொல்லும்.
நாம் அச்சங் கொண்டோம்: தாய் அதனை நீக்கி உறுதி
தந்தாள்.
நாம் துயர் கொண்டோம்: தாய் அதை மாற்றிக் களிப்புத்
தந்தாள்.
குனிந்த தலையை நிமிர்த்தினாள்:
சோர்ந்த விழியில் ஒளி சேர்த்தாள்
கலங்கிய நெஞ்சிலே தெளிவு வைத்தாள்:
இருண்ட மதியிலே ஒளி கொடுத்தாள்.
மஹா சக்தி வாழ்க.
(தொடரும்)
DVD












Click it and Unblock the Notifications