பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
ஜூன் 26, 2001
நம்ம ஜாதிக் கடுக்குமோ ...
ஒய் நந்தனாரே! நம்ம ஜாதிக் கடுக்குமோ?
நியாயந் தானோ? நீர் சொல்லும்? என்ற வர்ண மெட்டு)
பல்லவி
ஓய் திலகரே! நம்ம ஜாதிக் கடுக்குமோ?
செய்வது சரியா, சொல்லும்.
கண்ணிகள்
1. முன்னறி யாப்புது வழக்கம் - நீர்
மூட்டிவிட்டதிந்தப் பழக்கம் இப்போது
எந்நகரிலு மிது முழக்கம் - மிக
இடும்பை செய்யும் இந்த ஒழுக்கம். (ஓய் திலகரே)
2. சுதந்திரம் என்கிற பேச்சு - எங்கள்
தொழும்புக ளெல்லாம்வீணாய்ப் போச்சு - இது
மதம்பிடித் ததுபோ லாச்சு - எங்கள்
மனிதர்க் கெல்லாம்வந்த தேச்சு (ஓய் திலகரே)
3. வெள்ளை நிறத்தவர்க்கே ராஜ்யம் - அன்றி
வேறெ வர்க்குமது தியாஜ்யம் - சிறு
பிள்ளைக ளுக்கே உபதேசம் - நீர்
பேசிவைத்த தெல்லாம் மோசம். (ஓய் திலகரே)
(தொடரும்)
DVD












Click it and Unblock the Notifications