பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
ஏப்ரல் 29, 2001
வசன கவிதை
4.
ஆண், பெண், மனிதர், தேவர்,
பாம்பு,பறவை, காற்று, கடல்,
உயிர், இறப்பு- இவை யனைத்தும் ஒன்றே.
ஞாயிறு, வீட்டுச் சுவர், மலை, யருவி,
குழல், கோமேதகம்- இவ் வனைத்தும் ஒன்றே.
இன்பம், துன்பம்,பாட்டு,
வண்ணான், குருவி,
மின்னல், பருத்தி,
இஃதெல்லாம் ஒன்று,.
மூடன், புலவன்,
இரும்பு, வெட்டுக்கிளி-
இவை ஒரு பொருள்
வேதம்,ஸ கடல்மீன், புயற்காற்று, மல்லிகைமலர்-
உள்ள தெல்லாம் ஒரே பொருள், ஒன்று,
இந்த ஒன்றின்பெயர் தான்
தானே தெய்வம்,
தான் அமுதம், இறவாற்று.
(தொடரும்)
DVD












Click it and Unblock the Notifications