பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
மே 29, 2001
( தொடர்ச்சி)
சொல்ல மாட்டேன்கிறாயே? வேறொரு சமயம் வருகிறேன்.போகட்டுமா?
என்றேன்.
அட போடா! வைதிகம். வேடிக்கைதானே பார்த்துக் கொண்டிருக்கிறய்:
இன்னும் சிறிது நேரம் நின்று கொண்டிரு.. இவளிடம் சில
வ்யவஹாரங்கள் தீர்க்கவேண்டியிருக்கிறது.தீர்ந்தவுடன்
நீயும் நானும் சில விஷயங்கள் பேசலாம் என்றிருக்கிறேன்
போய் விடாதே இரு என்றது.
நின்று மேன்மேலும் பார்த்துக் கொண்டிருந்தேன்.
சிறிது நேரம் கழிந்தவுடன், பெண்ணும் இன்ப மயக்கத்திலே
நான் நிற்பதை மறந்து, நாணத்தை விட்டுவிட்டது.
உடனே பாட்டு, நேர்த்தியான துக்கடாக்கள். ஒர வரிக்கு
ஒரு வர்ணமெட்டு.
இரண்டே சங்கதி, பின்பு மற்றொரு பாட்டு.
கந்தன்பாடி முடித்தவுடன், வள்ளி, இது முடிந்தவுடன், அது
மாற்றி மாற்றிப் பாடி - கோலாஹலம்!
(தொடரும்)
DVD












Click it and Unblock the Notifications