கண்ணதாசனை காணுவோம்
1. கட்டோடு குழலாட ..
கட்டோடு குழலாட ஆட-ஆட
கண்ணென்ற மீனாட ஆட-ஆட
கொத்தோடு நகையாட ஆட-ஆட
கொண்டாடும் மயிலே நீ ஆடு! (கட்டோடு)
பாவாடை காற்றோடு ஆட-ஆட
பருவங்கள் பந்தாட ஆட-ஆட
காலோடு கால்பின்னி ஆட-ஆட
கள்ளுண்ட வண்டாக நீ ஆடு! (கட்டோடு)
முதிராத நெல்லாட ஆட-ஆட
முளைக்காத சொல்லாட ஆட-ஆட
உதிராத மலராட ஆட-ஆட
சதிராடு தமிழே நீ ஆடு! (கட்டோடு)
தென்னை மரத் தோப்பாகத் தேவாரப் பாட்டாகப்
புன்னை மரம் பூச்சொரிய சின்னவளே நீ ஆடு!
கண்டாங்கி முன்னாட கன்னி மனம் பின்னாட
கண்டு கண்டு நானாட செண்டாக நீ ஆடு! (கட்டோடு)
பச்சரிசிப் பல்லாட பம்பரத்து நாவாட
மச்சானின் மனமாட வட்டமிட்டு நீ ஆடு!
வள்ளி மனம் நீராடத் தில்லை மனம் போராட
ரெண்டு பக்கம் நானாட சொந்தமே நீ ஆடு! (கட்டோடு)
2. மெல்ல நட .. மெல்ல நட
மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்!
முல்லை மலர் பாதம் நோகும்-உந்தன்
சின்ன இடை வளைந்தாடும்
வண்ணச் சிங்காரம் குலைந்து விடும்! (மெல்ல)
படுக்கையை இறைவன் விரித்தான் - வரும்
பனித்திரையால் அதை மறைத்தான்
பருவத்தில் ஆசையைக் கொடுத்தான்- வரும்
நாணத்தினால் அதை தடுத்தான்! (மெல்ல)
அடிக்கடி சிரிக்கும் சிரிப்பு - அதில்
அழகிய மேனியின் நடிப்பு
படபடவெனத் துடிப்பு - இன்று
பதுங்கியதே என்ன நினைப்பு! (மெல்ல)
திருமணம் என்றதும் அடக்கம்- கண்கள்
திறந்திருந்தாலும் உறக்கம்
வருவதை நினைத்தால் நடுக்கம் - பக்கம்
வந்துவிட்டாலோ மயக்கம்! (மெல்ல)
3. மயங்குகிறாள் ஒரு மாது
மயங்குகிறாள் ஒரு மாது - தன்
மனதுக்கும் செயலுக்கும் உறவுமிலாது... (மயங்கு)
திருவாய் மொழியாலே
அத்தான் அத்தான் என்றால் நெஞ்சம் உருகாதா? (மயங்கு)
தோழியர் கதை சொல்லித் தரவில்லையா
துணிவில்லையா பயம் விடவில்லையா
நாழிகை செல்வதும் நினைவில்லையா
அன்பே அன்பே அன்பே அன்பே
அத்தான் அத்தான் என்றால் நெஞ்சம் உருகாதா?.... (மயங்கு)
பார்வையில் ஆயிரம் கதை சொல்லுவாள்
படித்தவள்தான் அதை மறந்துவிட்டாள்
காதலை நாணத்தில் மறைத்துவிட்டாள்
அன்பே அன்பே அன்பே அன்பே
அத்தான் அத்தான் என்றால் நெஞ்சம் உருகாதா?... (மயங்கு)












Click it and Unblock the Notifications