For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சுப்பு ஆறுமுகத்துக்கு ராஜா சர் விருது

By Staff
Google Oneindia Tamil News

செப்டம்பர் 24, 2004

சுப்பு ஆறுமுகத்துக்கு ராஜா சர் விருது

சென்னை:

2004ம் ஆண்டுக்கான ராஜா சர் அண்ணாமலை செட்டியார் நினைவு அறக்கட்டளை விருது வில்லிசைக் கலைஞர்சுப்பு ஆறுமுகத்துக்கு வழங்கப்படுகிறது.

வரும் 30ம் தேதி சென்னை ராணி சீதை மன்றத்தில் நடைபெறும் ராஜா சர் அண்ணாலைச் செட்டியார் 124வதுபிறந்தநாள் விழாவில் முன்னாள் அமைச்சர் ஆர்.எம். வீரப்பன் இந்த விருதை வழங்குகிறார்.

தமிழிசை வளர்ச்சிக்கு இவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. விருதுடன் ரூ.1 லட்சம் ரொக்கமும், பாராட்டுச்சான்றிதழும் வழங்கப்படுகிறது.

நீங்களும் வில்லுப்பாட்டு பாடலாம், வில்லிசை ராமாயணம், வில்லிசை மகாபாரதம் உள்ளிட்ட பல்வேறு நூல்களைசுப்பு ஆறுமுகம் எழுதியுள்ளார்.

ம.ரா.போ. குருசாமிக்கு தினத்தந்தி விருது:

2004ம் ஆண்டுக்கான மூத்த தமிழறிஞர் விருதையும், இலக்கியப் பரிசையும் தினந்தந்தி அறிவித்துள்ளது.

தினத்தந்தி நிறுவனர் சி.பா. ஆதித்தனார் பிறந்த நாளில் வருடந்தோறும் மூத்த தமிழறிஞர் விருதும், இலக்கியப்பரிசும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ம.ரா.போ. குருசாமிக்கு மூத்த தமிழறிஞர் விருது வழங்கப்படுகிறது.இவ் விருதுடன் வெள்ளிப் பட்டயத்துடன் ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசும் வழங்கப்படுகிறது.

ரூ.50,000 மதிப்புள்ள இலக்கியப் பரிசை கவிஞர் பொன்னடியான், பொன்னடியான் கவிதைகள் என்ற நூலுக்காகபெறுகிறார். வரும் 27-ம் தேதி ராணி சீதை மன்றத்தில் நடைபெறும் சி.பா. ஆதித்தனாரின் நூற்றாண்டுத் தொடக்கவிழாவில் இந்த விருதுகளை சென்னைப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் தியாகராசன் வழங்குகிறார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X