கன்னடர் கண்ணீர் துடைத்தவர் கலைஞர்- வாலி
சென்னையில் நேற்று நடந்த தமிழ்த் திரையுலகினரின் உண்ணாவிரதத்தில் கடைசியாக வந்து கலந்து கொண்டார் கவிஞர் வாலி. தனது மோசமான உடல் நிலையையும் பொருட்படுத்தாமல் உதவியாளர்கள் துணையுடன் வந்த வாலி உருக்கமாக பேசினார்.
வாலி பேசுகையில், நடிகர், நடிகைகள் நல்ல மனிதர்கள் என்பதை இப்போது நிரூபித்துள்ளனர். நமது நாட்டில் பல இனங்கள் உள்ளன, மொழிகள் உள்ளன. ஆனாலும் வேற்றுமையிலும் ஒற்றுமை காண்கிறோம். ஆனால் தற்போது இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கும் நிலை உருவாகியுள்ளது.
இப்படிப்பட்ட நிலையில் பாரத மாதாவின் புத்திரர்கள் நாம் என்று நானும், வைரமுத்துவும் எழுதுவதில் என்ன பலன் இருக்க முடியும்.
முதல்வர் கருணாநிதி கன்னர்களைப் பற்றி தவறுதலாக பேசியுள்ளார் என்று கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா பேசியுள்ளார். இது தமிழர்களைக் காயப்படுத்துவதாக உள்ளது.
எம்.ஜி.ஆர். + சிவாஜி = ராஜ்குமார் என்று கூறப்படும் கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரை வீரப்பன் கடத்திச் சென்றபோது அவரை மீட்டு கன்னர்களின் கண்ணீரைத் துடைத்தவர் கலைஞர். அப்போது கன்னட மக்களின் கண்ணீரைத் துடைத்தோம். ஆனால் இப்போது அவர்கள் நமக்கு தண்ணீர் தர மறுக்கிறார்கள். இது வேதனை தருகிறது என்றார் வாலி.
நடிகை மனோரமா பேசுகையில், புழுவைக் கம்பால் குத்திக் கொண்டே இருந்தால் அது ஒரு கட்டத்தில் அந்தக் கம்பை கடிக்க ஆரம்பிக்கும். அதற்கு கூட அந்தளவுக்கு உணர்வு இருக்கிறது. அன்று காவிரியின் குறுக்கே கல்லணை கட்டி தண்ணீர் கொடுத்தான் கரிகால் சோழன். இன்று இவர்கள் யார் நமக்கு தண்ணீர் இல்லை என்று சொல்வதற்கு.
ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை முதல்வர் கலைஞர் நிச்சயம் நிறைவேற்றுவார். அவர் நிச்சயமாக இதைச் செய்வார். அவர் தமிழன். அவர் நினைத்தால் எதையும் நிச்சயம் செய்து முடிப்பார்.
நதிகளை தேசியமயமாக்கும் திட்டத்தைக் கொண்டு வந்தால் ரூ. 1 கோடி தருவதாக தம்பி ரஜினிகாந்த் முன்பு கூறியிருந்தார். அந்தத் திட்டம் வரும் பொன்னாள் வெகு தூரம் இல்லை. அதைப் பார்த்து விட்டுத்தான் நானும் சாவேன் என்றார்.
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?













Click it and Unblock the Notifications