தமிழறிஞர்களுக்கு ஆதித்தனார் இலக்கியப் பரிசு
அமரர் சி.பா. ஆதித்தனார் நினைவாக ஆண்டுதோறும் வழங்கப்படும் இலக்கியப் பரிசுக்கு விண்ணப்பிக்கலாம் என கோரப்பட்டுள்ளது.
தமிழுக்கு அருந்தொண்டாற்றி வரும் மூத்த தமிழ் அறிஞர் ஒருவருக்கு ரூ.1.5 லட்சமும், சிறந்த இலக்கியத்துக்கு ரூ. 1 லட்சமும் இந்த பரிசு பிரித்து வழங்கப்படும்.
ஆதித்தனார் நினைவு நாள் வருடந்தோறும் மே 24ம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனையொட்டி ஆண்டுதோறும் இலக்கியப் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
சென்ற ஆண்டு டாக்டர் வ.அய். சுப்பிரமணியத்துக்கு மூத்த தமிழ் அறிஞருக்கான ரூ.1.5 லட்சம் பொற்கிழி வழங்கப்பட்டது.
காக்கைச் சோறு என்ற நூலை எழுதிய கவிக்கோ அப்துல் ரகுமானுக்கு சிறந்த இலக்கியத்துக்காக ரூ.1 லட்சம் வழங்கப்பட்டது.
ஆதித்தனாரின் பிறந்த நாளான செப்டம்பர் 27ம் தேதி நடக்கும் விழாவில் இவ்வாண்டுக்கான பரிசு வழங்கப்படும்.
கதை, கவிதை, நாடகம், கட்டுரை என்று எல்லா துறைகளையும் சேர்ந்த நூல்களையும் பரிசுக்கு அனுப்பி வைக்கலாம்.
கடந்த 3 ஆண்டுகளுக்குள் முதல் பதிப்பாக வெளிவந்த நூலாக இருக்க வேண்டும். 192 பக்கத்துக்கு குறையக்கூடாது. ஆசிரியர் அல்லது பதிப்பாளர் அனுப்பி வைக்கலாம்.
ஜுன் 30ம் தேதிக்குள் விண்ணப்பங்கள், நூல்களுடன் வந்து சேர வேண்டும். தேர்வு குழு பரிசுக்குரிய தேர்வு நூலை தேர்ந்தெடுக்கும்.
பரிசுக்குரிய மூத்த தமிழ் அறிஞர் பெயரை யார் வேண்டுமானாலும் சிபாரிசு செய்து அனுப்பி வைக்கலாம். உடன் அவரது பணிகளையும் எழுதி அனுப்ப வேண்டும்.
மேலும் விபரம் பெற:
ஆதித்தனார் இலக்கியப் பரிசு,
தினத்தந்தி,
சென்னை 600 007
என்ற முகவரியைத் தொடர்பு கொண்டு பெறலாம்.












Click it and Unblock the Notifications