'காத்திருந்த கருப்பாயி' நூல் வெளியீடு
Subscribe to Oneindia Tamil
கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை இலக்கியப் பட்டறை உறுப்பினர் மலர்வதி எழுதிய 'காத்திருந்த கருப்பாயி' என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
வரலாற்று ஆய்வாளர் மா. பென்னி தலைமை வகிக்க, ருவனந்தபுரம் பல்கலைக்கழக கல்லூரி பேராசிரியர் அருணகிரி வரவேற்றார்.
முளகுமூடு வட்டார முதன்மைப் பணியாளர் ஜார்ஜ் பொன்னையா நூலை வெளியிட்டு வாழ்த்திப் பேசினார். கவிஞர் குமரி ஆதவன் நூல் ஆய்வுரை நிகழ்த்தினார்.
இதில் மணலிக்கரை புனித மரிய கொரட்டி மேல் நிலைப்பள்ளி உதவித் தலைமை ஆசிரியர் புஷ்பதாஸ், மேல்புறம் பங்குப் பணியாளர் எடிசன், முதற்சங்கு மாத இதழ் ஆசிரியர் சிவனிசதீஷ், விரிவுரையாளர் சுரேஷ் டேனியல் உள்ளிட்டோர் பேசினர்.
நூல் ஆசிரியர் மலர்வதி ஏற்புரை நிகழ்த்தினார்.












Click it and Unblock the Notifications