தஞ்சை நூலக வாசகர் வட்ட கூட்டம்
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர் மாவட்ட மைய நூலகத்தில் வாசகர் வட்ட கூட்டம் நடைபெற்றது.
வாசகர் வட்டத் தலைவர் லியோ ராமலிங்கம் தலைமை வகிக்க மாவட்ட நூலக அலுவலர் கி. நாகராஜன் முன்னிலை வகித்தார். நுகர்வோர் பாதுகாப்புச் சங்க பொதுச் செயலர் சா. அடைக்கலம் 'நுகர்வோர் உரிமைகளும் கடமைகளும்' என்னும் தலைப்பில் பேசினார்.
கவிஞர் ஆதி நெடுஞ்செழியன் பகவத் கீதையில் வடமொழிச் சொற்கள் பயன்பாடு குறித்து பேசினார்.
முன்னாள் மாவட்ட நூலக அலுவலர் கே. நடராஜன், பி.எஸ்.என்.எல். கோட்ட மேலாளர் எம். குணசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நூலகர்கள் சு. சங்கர், த. மோகன்தாஸ் நன்றி தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications