பேராசிரியர் சிவகுமாரனுக்கு பாராட்டு விழா
புதுச்சேரி: சிங்கப்பூர்த் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் ஆ.இரா.சிவகுமாரனுக்கு புதுச்சேரியில் இன்று பாராட்டு விழா நடைபெறுகிறது.
புதுச்சேரித் தகவலாளர் மன்றம் ஏற்பாடு செய்துள்ள இந்த பாராட்டு விழா புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் இன்று வியாழக்கிழமை மாலை ஆறு மணிக்கு நடைபெறுகிறது.
சிங்கப்பூர் நன்யாங் தொழில் நுட்பப் பல்கலைக் கழகத்தில் உள்ள தேசியக் கல்விக் கழகத்தில் தமிழ் மொழி, பண்பாட்டுத்துறைத் தலைவராகப் பணிபுரிகிறார் முனைவர் ஆ.இரா.சிவகுமாரன்.
சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியங்கள் பற்றிய பல்வேறு ஆய்வுகளைச் செய்த இவரின் தமிழ்ப் பணியைப் பாராட்டி நடைபெறும் விழாவில் கவிக்கோ கமலக்கண்ணன் தலைமை தாங்குகிறார்.
முனைவர் மு.சுதர்சன் சான்றிதழ் வழங்கவும், முனைவர் சு.தில்லைவனம், முனைவர் ப.பத்மநாபன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கவும் உள்ளனர். முனைவர் ஆ.இரா.சிவகுமாரன் அவர்கள் ஏற்புரையாற்றுகிறார்.
புதுச்சேரித் தகவலாளர் மன்றம், தொல் இளமுருகு பதிப்பகம் இவ்விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளன.












Click it and Unblock the Notifications