சளுக்கை பள்ளியில் இலக்கிய விழா
Subscribe to Oneindia Tamil
வந்தவாசி: வந்தவாசியை அடுத்த சளுக்கை அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ் இலக்கிய மன்றம் மற்றும் இலக்கிய விழா நடந்தது.
வந்தவாசி தமிழ்ச் சங்கம் சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியை எ. கலைவாணி தலைமை தாங்கினார். வந்தவாசி தமிழ்ச் சங்கத் தலைவர் வே. சிவராமகிருஷ்ணன், வழக்கறிஞர் சா.இரா. மணி, ஆசிரியர் ராஜேந்திரன் ஆகியோர் 'தமிழும் தேசியமும்' என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினர்.
10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் பாடத்தில் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவன் இராஜப்பிரகாஷுக்கு தமிழ்ச் சங்கம் சார்பில் சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்பட்டது.












Click it and Unblock the Notifications