இந்தியாவுக்கான தருணம்: நூல் வெளியீடு
சென்னை: இந்தியாவுக்கான தருணம்: பொருளாதார மாற்றத்தைப் புரிந்து கொள்ளுதல் என்ற நூல் சென்னையில் வெளியிடப்பட்டது.
சென்னையில் நடைபெற்ற விழாவில் "இந்தியாவுக்கான தருணம்: பொருளாதார மாற்றத்தைப் புரிந்து கொள்ளுதல்' என்ற நூல் வெளியிடப்பட்டது. பொருளாதார ஆய்வாளர் பேராசிரியர் அரவிந்த் சுப்பிரமணியம் எழுதிய இந்தப் புத்தகத்தை மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் வெளியிட, முதல் பிரதியை எம்பி சி.ரங்கராஜன் பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய ப. சிதம்பரம், அரவிந்த் சுப்பிரமணியம் இந்தப் புத்தகத்தில் தனியார் மயம், இந்திய கல்வி முறை, இந்திய பொருளாதார முன்னேற்றங்கள் பற்றி அலசி ஆராய்ந்துள்ளார். இதை பொருளாதாரம் சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமல்ல அனைவரும் வாங்கிப் பயன்பெற வேண்டும் என்றார்.
சென்னை பொருளியல் கல்வி நிறுவனத்தின் இயக்குநர் டி.கே. ஸ்ரீவத்சவா, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அச்சகத்தின் மண்டல இயக்குநர் வேணுகோபால் பாஸ்கரன் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications