அஞ்சல் நிலையங்களில் தங்க காசு விற்பனை!
சேலம்: தமிழகம், டெல்லி உள்ளிட்ட 4 மாநிலங்களில் உள்ள அஞ்சல் நிலையங்களில் இன்று முதல் தங்க காசு விற்பனை தொடங்குகிறது.
இது குறித்து சேலம் கிழக்கு அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணி்ப்பாளர் வரதராஜன் கூறியதாவது
இந்திய அஞ்சல் துறை சுவிச்சர்லாந்தில் உள்ள உலக தங்க கவுன்சிலோடு ஒப்பந்தம் செய்துள்ளது. அங்கிருந்து ரிலையன்ஸ் மணி நிறுவனம் மூலம் சுத்தமான 24 காரட் தங்க காசுகளை வாங்கி கமிஷன் அடிப்படையில் விற்க உள்ளது.
அஞ்சல் நிலையங்களில் அரை கிராம், ஒரு கிராம், 5 கிராம், 8 கிராம் தங்க காசுகளை விற்பனை செய்ய உள்ளோம்.
இதன் முதல் கட்டமாக டெல்லி, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் உள்ள 103 தலைமை அஞ்சல் நிலையங்களில் இன்று முதல் விற்பனை செய்யப்படும்.
தமிழகத்தில் மட்டும் 45 அஞ்சல் நிலையத்தில் தங்க காசுகள் விற்பனை செய்யப்பட உள்ளது. மூன்று மாதங்களுக்குப் பிறகு மற்ற பகுதிகளுக்கு விற்பனை விரிவு படுத்தப்படும். இந்த தங்க காசுகள் தினசரி சந்தை விலை நிலவரம் அடிப்படையில் விற்பனை செய்யப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications