'பொற்கிழிப் பூக்கள்' கவிதை நூல் வெளியீடு
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பொற்கிழிக் கவிஞர் கா.நாகப்பன் எழுதிய 'பொற்கிழிப் பூக்கள்' என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
விழாவில் கவிஞர் அரு. சோமசுந்தரன் தலைமை வகித்தார்.
'பொற்கிழிப் பூக்கள்' கவிதை நூலை தேவகோட்டை சேவுகன் அண்ணாமலைக் கல்லூரித் தலைவர் லெட்சுமணன் செட்டியார் வெளியிட, அதை சென்னை டெக்சாஸ் டெக்னாலஜி இயக்குநர் எஸ்.துரை பெற்றுக் கொண்டார்.
விழாவில் ஊராட்சித் தலைவர் ஒ.சிறுவயல் அழகப்பன், கவிஞர் அர. சிங்காரவடிவேலன், உலகத் தமிழ் எழுத்தாளர் சங்க மாவட்டத் தலைவர் அய்க்கண், கவிஞர் அரு. நாகப்பன், ராமசாமி தமிழ்க் கல்லூரி முதல்வர் வள்ளி சொக்கலிங்கம், புலவர் ராம. வள்ளியப்பன், கவிஞர் லெ. வள்ளியப்பன், அரிமா சுந்தர், ஆசிரியர் ஜெயங்கொண்டான் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். கவிஞர் கா. நாகப்பன் ஏற்புரையாற்றினார்.
கந்தனருள் ராமநாதன் வரவேற்றார். நா. மல்லையன் நன்றி கூறினார்.












Click it and Unblock the Notifications