பொங்கல் தூத்துக்குடியில் மஞ்சள் விளைச்சல் அமோகம்!
தூத்துக்குடி: பொங்கல் பண்டிகையின்போது பானையில் வைத்துக் கட்டப்படும் மஞ்சள் அமோக விளைச்சலைக் கண்டுள்ளதால் தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையின்போது கரும்பு, மஞ்சள்குலை, பழம் உள்ளிட்டவைகளை வைத்து வழிபாடு நடத்துவது வழக்கம்.
பொங்கல் பண்டிகைக்காக மஞ்சள் தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள சேர்வைக்காரன்மடம், தங்கம்மாள்புரம், சிவத்தையாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆண்டுதோறும் பயிரிடப்பட்டு வருகிறது.
இந்த மஞ்சள் பயிர்கள் அனைத்தும் அறுவடைக்கு தயாராகி வருகிறது. இந்த வாரம் முதல் மஞ்சள் குலைகள் அறுவடை செய்யப்பட்டு சந்தைக்கு வர உள்ளன. பொதுவாக இந்த பகுதிகளில் அறுவடை செய்யப்படும்
மஞ்சள் தூத்துக்குடிக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகிறது. அதுமட்டுமின்றி தூத்துக்குடி மஞ்சள் டெல்லி, சென்னைக்கு அனுப்பப்படுகிறது.
இதுகுறித்து ஒரு விவசாயி கூறுகையில், புதுக்கோட்டை வட்டாரத்தில் மஞ்சள் பயிரிடப்படுகிறது. இதற்கான விதை மஞ்சள் ஆலங்குளம் அருகேயுள்ல சிவலூரில் இருந்து வாங்கி வரப்படுகிறது. ரூ.15க்கு வாங்கி இந்த சுற்று வட்டாரத்தில் பயிரிடப்படுகிறது.
தற்போது நல்ல மழை பெய்துள்ளதால் ஒரு ஏக்கருக்கு 10 ஆயிரம் மஞ்சள் குலைகள் விளைச்சல் கிடைக்கும். ஒரு மஞ்சள் குலை உற்பத்திக்கு ரூ.3 செலவாகிறது. இதனால் ரூ.4 முதல் 5 வரை ஒரு மஞ்சள் குலை விற்பனை செய்யப்படும்.
இங்கு விளையும் மஞ்சள் பொங்கல் பண்டிக்கைக்கு விற்பனைக்கு போக மீதம் உள்ள மஞ்சள் குலைகள் அனைத்தும் சென்னை மற்றும் டெல்லிக்கு அனுப்பப்படுகிறது என்றார்.
-
இவ்வளவு ஸ்ட்ரிக்டா? 2 நாளில் 23 கோடி சிக்கியது! பணம், பொருளாக அள்ளிய தேர்தல் அதிகாரிகள்! முழு விவரம் -
கீழடி ஆய்வறிக்கையையும் மத்திய அரசை வெளியிட வைப்போம்! மு.க.ஸ்டாலின் -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்!












Click it and Unblock the Notifications