தென்னிந்திய வரலாற்று பேரவை மாநாடு நாளை நெல்லையில் துவக்கம்
நெல்லை: பல மாநில பேராசிரியர்கள் பங்கேற்கும் தென்னிந்திய வரலாற்று பேரவையின் ஆண்டு மாநாடு நெல்லையில் நாளை முதல் 3 நாட்களுக்கு நடக்கிறது.
இதுகுறித்து நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக வரலாற்று பேராசிரியர் மணிக்குமார், மற்றும் மதுரை காமராஜார் பல்கலை கழக பேராசிரியர் சந்திரபாபு நிருபர்களிடம் கூறுகையில்,
இளம் ஆய்வாளர்கள் மற்றும் மூத்த அறிஞர்கள் வரலாற்று ஆய்வு தொடர்பான தங்களின் கண்டுபிடிப்புகளை பகிர்த்து கொள்ளும் ஒரு வரலாற்று பேரவையாக தென்னிந்திய வரலாற்று பேரவை வளர்ந்து வருகிறது.
1978ம் ஆண்டு மதுரை காமராஜர் பல்கலையில் துவக்கப்பட்ட இந்த வரலாற்று பேரவை சார்பில் இதுவரை 28 ஆண்டு பேரவை கூட்டங்கள் நடந்துள்ளது. தென்னிந்தியாவை சேர்ந்த பல்கலைக்கழக பேராசிரியர்கள் இதில் உறுபபினராக உள்ளனர்.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்கள், நினைவு சின்னங்களை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.
இப்பேரவையின் 29வது ஆண்டு மாநாடு நாளை, 31ம் தேதி மற்றும் பிப்ரவர் 1 ஆகிய மூன்று தினங்கள் நடக்கிறது.
இம்மாநாட்டில் அரசியல், பொருளாதாரம், சமூகம், பண்பாடு மற்றும் வரலாற்று வரைவியல் போன்ற பிரிவுகளில் பல்வேறு பேராசிரியர்களின் 200க்கும் மேற்பட்ட ஆய்வு கட்டுரைகள் சமர்பிக்கப்பட உள்ளது.
இம்மாநாட்டில் தமிழகம், கேரளா ஆந்திரா, கர்நாடகா, ஓரிசா, மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து வரலாற்று ஆய்வாளர்கள் கலந்து கொள்கின்றனர். இம்மாநாட்டை நடத்த இந்திய வரலாற்று ஆய்வு கழகம் நிதி உதவி செய்துள்ளது என்றனர்.












Click it and Unblock the Notifications