ஜல்லிக்கட்டு தடையை நீக்கக் கோரி மொட்டை போட்டு போராட்டம்
Subscribe to Oneindia Tamil
திருச்சி: ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடையை விலக்க கோரி திருச்சி சயமபுரம் கோயிலில் மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 600 பேர் மொட்டை போட்டு நூதன போராட்டம் நடத்தினர்.
ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதி மன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இதனால் தென் மாவட்டங்களில் பல ஊர் திருவிழாக்களில் நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனால் தங்களது ஊரில் பல சொல்ல முடியாத துயரங்கள் ஏற்படுவதாக பொது மக்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதி மன்றம் விதித்த தடையை நீக்க வேண்டும் என்று மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சையைச் சேர்ந்த சுமார் 600 பேர் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு காளைகளுன் சென்று மொட்டை போட்டுக் நூதன போராடம் மேற்கொண்டனர்.












Click it and Unblock the Notifications