For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குமரியில் திருவள்ளுவர், விவேகானந்தர் ஒளி-ஒலி காட்சி

By Sridhar L
Google Oneindia Tamil News

Kanyakumari
குமரி: கன்னியாகுமரியில் ஒளி, ஒலி காட்சி அமைக்கும் பணிக்கான பூஜைகள் இன்று துவங்கின.

குமரியில் உள்ள ரூ.2 கோடியே 25 லட்சம் செலவில் திருவள்ளுவர், சுவாமி விவேகானந்தர், பகவதி அம்மன் குறித்து மக்களிடையே அதிக விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அவர்கள் குறித்த சுவரஸ்யமான சம்பவங்களை கொண்ட ஒளி, ஒலி காட்சிக்கூடம் அமைக்கப்பட இருக்கிறது. இதற்கான செலவினை மத்திய, மாநில அரசுகள் இணைந்து ஏற்றுக் கொண்டுள்ளன.

இக்காட்சிகளை நடத்த பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு துறை அருகில் அரங்கம் ஒன்று அமைக்கப்படுகிறது. இதில் சுமார் 500 பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து நிகழ்ச்சிகளை பார்க்கலாம்.

இந்த ஒளி-ஒலி காட்சி தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட மூன்று மொழகளில் நடக்கும். தினமும் மாலை 3 காட்சிகள் நடைபெற இருக்கிறது. இதற்கான கட்டுமான பணி இன்று பூஜையுடன் துவங்கியது.

நிகழ்ச்சியில் இந்திய சுற்றுலா வளர்ச்சி கழக மண்டல பொறியாளர் அய்யாத்துரை, சுற்றுலா அலுவலர் அரிராதாகிருஷ்ணன், பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக மேலாளர் சொர்ண பாண்டியன், துணை மேலாளர் (தொழில்நுட்பம்) வின்ஸ்லிராய், உதவி மேலாளர் ஜோசப், தமிழ்நாடு கடல்சார் வாரிய துறைமுக பாதுகாப்பு அதிகாரி பகவதி பெருமாள் ஆகியோர் பங்கேற்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X