மண்டைக்காட்டில் நள்ளிரவில் ஒடுக்கு பூஜை!
குளச்சல்: மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நேற்று ஒடுக்கு பூஜை நடைபெற்றது.
பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படும் மண்டைக்காடு பகவதிஅம்மன் கோயில் மாசி கொடை விழா கடந்த ஒன்றாம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான ஆறாம் நாள் இரவு வலியபடுக்கை எனப்படும் மஹாபூஜை நடந்தது.
ஒன்பதாம் நாள் விழாவான 9ம் தேதி இரவு பெரிய சங்கர தீவட்டியுடன் அம்மன் வெள்ளி பல்லாக்கில் பவனி வரும் நிகழ்ச்சி நடந்தது. மாசி கொடை விழா துவங்குவதற்கு முன்பே கேரள பெண் பக்தர்கள் இருமுடி கட்டி மண்டைக்காடு வந்து பொங்கலிட்டு அம்மனை வழிபட்டு சென்றனர்.
பத்தாம் நாள் விழாவான நேற்று காலை முதலே அம்மனை தரிசிக்க கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் மண்டைக்காட்டில் குவித்தனர். நேற்று அதிகாலை 3.30 மணிக்கு அம்மன் வெள்ளிப் பல்லாக்கில் பவனி வந்தார்.
அடியந்திர பூஜை, குத்தியோட்டம் நிகழ்ச்சி நடந்தது. மாலை 5 மணிக்கு திருநடை திறக்கப்பட்டு, 6.30 மணிக்கு சாயரட்சை தீபாரதனை நடந்தது. இரவு 8 மணிக்கு ஹரி கதை, 9 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லாக்கில் பவனி வருதல், 11 மணிக்கு கர்நாடக சங்கீதம் நடந்தது.
நள்ளிரவு 12 மணிக்கு விரமிருந்த அம்மன் பக்தர்கள் பகவதி அம்மனுக்கென்று விசேஷசமாக தயாரிக்கப்பட்ட உணவு பண்டங்கள், காய்கறிகள், கனி வகைகளை சுத்தமாக மண்பானைகளில் வெள்ளை துணியால் மூடி ஊர்வலமாக பகவதி அம்மன் கோயிலுக்கு கொண்டு சென்றனர். பின்னர் ஓடுக்கு பூஜை நடந்தது.
நேற்று காலை முதல் அதிகாலை சுமார் மூன்று மணி நேரம் வரை மண்டைக்காட்டில் பக்தர்கல் கூட்டம் அலைமோதியது. கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். ரகசிய கேமராக்களும் பொருத்தப்பட்டு அதன் மூலமும் பக்தர்கள் கண்காணிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications